திமிர்
எத்தனை அழகாக இருக்கிறது—
உயர்ந்த பாத்திரத்தில்
பொங்கிவரும் பால்
உள்ளடங்குவதைப்
போல!
அது—
சாதாரண மனிதர்களை
சாவுக்குழிக்கு
அனுப்பிவிடுகிறது—
குட்டைப் பாத்திரத்தில்
பொங்கும் பால்
வழிந்து
நெருப்பை அழிப்பது
போல!
அதோ—
அந்த விதைக்கு
எத்தனை திமிர்!
மண்ணைக் கீறிக்கொண்டு
மரமாய் முளைக்கிறது…
எளியோர் கூட திறமை
இருப்பின்
திமிர் கொள்ளலாம்
என்கிறதா?
இதோ—
தீக்குச்சியின்
திமிரே திமிர்!
உணவும் சமைக்கிறது,
ஊரையும் எரிக்கிறது!
பயன்படு பொருளுக்கு
பக்குவப் பட்டவன்
பாதை போடவேண்டும்
என்று எச்சரிக்கிறதா?
No comments:
Post a Comment