Monday, September 10, 2018

என் கவிதைகள்


திமிர்
எத்தனை அழகாக இருக்கிறது—
உயர்ந்த பாத்திரத்தில்
பொங்கிவரும் பால்
உள்ளடங்குவதைப் போல!

அது—
சாதாரண மனிதர்களை
சாவுக்குழிக்கு அனுப்பிவிடுகிறது—
குட்டைப் பாத்திரத்தில்
பொங்கும் பால் வழிந்து
நெருப்பை அழிப்பது போல!

அதோ—
அந்த விதைக்கு எத்தனை திமிர்!
மண்ணைக் கீறிக்கொண்டு
மரமாய் முளைக்கிறது…
எளியோர் கூட திறமை இருப்பின்
திமிர் கொள்ளலாம் என்கிறதா?

இதோ—
தீக்குச்சியின் திமிரே திமிர்!
உணவும் சமைக்கிறது,
ஊரையும் எரிக்கிறது!
பயன்படு பொருளுக்கு
பக்குவப் பட்டவன்
பாதை போடவேண்டும்
என்று எச்சரிக்கிறதா?


No comments:

Post a Comment

Featured Post

என் சிறுகதை. ஜனவரி 1968 கலைமகள் பத்திரிகையில் வெளியானது

  அவரும் அவளும்                    கையில் ஒரு பெரிய பையை எடுத்துக்கொண்டு ஜங்க்‌ஷனுக்குக் கிளம்பினார் மாதவன். வழுக்கை விழுந்திருந்த அவருட...