ஹிந்துக்கள்
எழுச்சி
சங்கரன் ஒன்றே
என்றான்
இராமானுஜன் மூன்று
என்றான்
மத்வன் இரண்டென விரல் விரித்தான்
மூவரும் இன்று
ஒன்றிப்போயினர்
உலகில் பாரதம்
எழுந்து நின்றது
பழைய மாச்சர்யங்கள்
பழஞ்சரக்காயின
கண்டீர்
கணபதி தொழுதல்
முதற்கொண்டு
தன்னேறிலா தெய்வ
சந்நிதிகள்
கோயில்களாய் எழும்பின
காணீர்
தெய்வ மறுப்பெனும்
நோய்
செய்வதறியாது திகைத்தல்
காணீர்
ஒன்றுபட்டோம் உயர்வடைய
ஓங்காரம் ஒலிக்கட்டும்
ஆனாலும் இது போதாதென
அவனியில் எடுத்துரைப்போம்
சுற்றிலும் மதப்பகைகள்
சூழ்ந்து நமை வீழ்த்த
ஆயத்தம்
நாமார்க்கும் கெடுதல்
செயவில்லை
நம்மைக் குதற வருகின்றார்.
போலிகள் ஊர்வலமாய்
வருது பாரீர்
வேடங்கள் தரித்து
மேட்டிமை பேசுகின்றார்
புரிந்து நடப்போம்
ஒன்றாய் மண்ணில்
வங்கத்தை ஆளும்
மங்கை
மாதேவிப் பந்தலுக்கு
ஈயுகின்றாள்
ஆண்ட கட்சித் தலை
ஒருவன்
ஆள் அம்பு சேனையுடன்
ஆங்காங்கே கோயிலை
வணங்குகிறான்
வெகுண்டெழுவோம்
வேடதாரிகளை
புறம் தள்ளி
ஒட வைப்போம்
ஹிந்துக்கள் ஒன்றானோம்
இனி பாரதம் நமதே!
No comments:
Post a Comment