Writer and Educationist எழுத்தாளர் கல்வியாளர்

Saturday, September 15, 2018

என் கவிதைகள் 8


நீ யாராகவேண்டும்

அவன்

படிப்பை முடிக்கவில்லை


‘நீ யாராகவேண்டும்..’


ஒருமாதிரி சிரித்தான் அந்த

அரியர்ஸ் ஸ்பெஷலிஸ்ட்..


‘நீ யாராகவேண்டும்..’

மீண்டும் கேட்டேன்


‘மல்லையா,

நீரவ் மோடி,

சொக்ஸி. கார்த்தி’ என்றான்


அடேய் அவர்கள் ….


நான் முடிப்பதற்குள் சொன்னான்


‘ஐயா. அவர்கள்

எங்களுக்கு மாடல்கள்

சுற்றிலும் பெண்கள்

சொகுசு வாழ்க்கை

சொந்த மாளிகை போல

சிறைச்சாலைகள்


ஊடக வெளிச்சம்


இன்று ஜெயில்

நாளை பெயில்


ஒருத்தன் முகத்திலாவது

அவமானம் கொள்கிறானா

சிரிப்பு ..கையசைப்பு


நீதிகள் விலைக்கு

நடு ராத்திரியிலும் திறக்கும்


ஐஐடியில் படித்தவரைவிட

சொகுசு வாழ்க்கை


அதுவே என் லட்சியம்

எனக்கு இந்தப் படிப்பு போதும்

பிழைத்துக்கொள்வேன்’



ததாஸ்து என்றேன்

அப்படி இருக்கிறது உலகம்




No comments:

Post a Comment