வார்த்தைப் பூக்கள்
வார்த்தைகளுக்கும் மணமுண்டு
வாய்ச்சொல்தான் மையக்களம்
மாந்தர்க்கு அறிவீர்
நாமணக்கும் வார்த்தைகள்
வாய்ச்சொல்தான் மையக்களம்
மாந்தர்க்கு அறிவீர்
நாமணக்கும் வார்த்தைகள்
ஞாலத்தின் உயர்
பண்பாம்
மேதினியில் வாழ்வோரே
வீழ்வதில்லை என்றும்
நாம்
இருப்பது சிலகாலம்
இங்கு ஏன் அடிதடிகள்
காய் கவர்ந்த வார்த்தைகள்
கற்காலம் அழைத்துச்
செல்லும்
பூசல்கள் பூவுலகை
நாசமாக்கும்
புண்ணாகும் மனித
மனங்கள்
வீழுவது சுலபம் மண்ணில்
மென்மனமே நன்மார்க்கம்
நன்றிது சொல்ல
வந்தேன்
நானிலமெங்கும்
உரைப்பீர்
நலம்பட வாழ்வீர் வாழ்க நீவிர்
No comments:
Post a Comment