Writer and Educationist எழுத்தாளர் கல்வியாளர்

Wednesday, September 12, 2018

என் கவிதைகள்


 வார்த்தைப் பூக்கள்

வார்த்தைகளுக்கும் மணமுண்டு
வாய்ச்சொல்தான் மையக்களம் 
மாந்தர்க்கு அறிவீர்

நாமணக்கும் வார்த்தைகள்
ஞாலத்தின் உயர் பண்பாம்

மேதினியில் வாழ்வோரே
வீழ்வதில்லை என்றும் நாம்

இருப்பது சிலகாலம்
இங்கு ஏன் அடிதடிகள்
காய் கவர்ந்த வார்த்தைகள்
கற்காலம் அழைத்துச் செல்லும்
பூசல்கள் பூவுலகை நாசமாக்கும்
புண்ணாகும் மனித மனங்கள்

வீழுவது சுலபம் மண்ணில்
மென்மனமே நன்மார்க்கம்

நன்றிது சொல்ல வந்தேன்
நானிலமெங்கும் உரைப்பீர்
நலம்பட வாழ்வீர் வாழ்க நீவிர்




No comments:

Post a Comment