(1967ல் திரு நா.பா அவர்களின் தீபம் பத்திரிகையில்
நடந்த மொழிப்பிரச்னை கருத்தரங்கில் முதல் பரிசு பெற்ற கட்டுரை. தீபம் அலுவலகத்தில் நடந்த
நிகழ்ச்சியில் திரு அகிலன் அவர்கள் எனக்கு பார்க்கர் பேனா பரிசளித்தார். நான் ஆ என்று
பார்த்த முன்னணி எழுத்தாளர்கள் அங்கே பிரசன்னம்)
கல்வி
பெற ஆங்கிலம் ஏன் மிக அவசியம்
(
மொழிவாரி மாநிலங்கள்
இந்தியா விடுதலை
அடைந்த பிறகு ஆளும் அரசியலார் செய்த
முதல் பெரிய தவறு,
நாட்டை மொழிவாரி மாநிலங்களாக்ப் பிரித்ததுதான்
என்று அறிஞர் சிலர்
கூறுவது உண்மையான கூற்றாகத்தான் இருக்கிறது.
இந்தியா போன்று
ஒரு சர்வதேச நாடாகவும், ஆசியாவின் ஜனநாயகப் பாதுகாப்பு
சின்னமாகவும் திகழ்கிற
தேசத்திற்கு இன்றைய மொழிப்பிரச்ச்னையே ஒர் இழுக்கு என்ற்தான்
கூறிக்கொள்ளவேண்டும்.
கல்வித் துறையிலரசியல்வாதிகளின் தலையீட்டினால்தான்
இத்தனை தொல்லைகள்
விளைந்துள்ளன. நாம் முதலில் தேசபக்தியுடன் நடந்துகொள்ள
முயற்சி செய்யாத்தனால்தான்
கல்விமொழிப் பிரச்னையே முளைத்திருக்கிரது.
ஆங்கிலேயனை விரட்டியது தேசபக்தியாகத் திகழும்
செயலுக்கு ஓர் எடுத்துக் காட்டென்றால்
சிலர் ஆங்கிலத்தை
விரட்டுவது கூட ஒரு தேசபக்திச் செயலே என்று கூக்குரலி
டுகின்றனர். முல்ளை
முள்ளால் எடுப்பதைப் போல அன்று ஆங்கிலத்தை ஆங்கிலத்தால்
நமது விடுதலை வீரர்கள்
விரட்டினார்கள். அன்று தொட்டு நம் நாட்டுக்கு இயற்கையாக
அமைந்த ஓர் இணைப்பு
மொழியாக ஆங்கிலம் உதவி செய்து வந்திருக்கிறது
அதற்கு முன்னால்
நாம் என்ன ஒற்றுமையாக ஒரே நாட்டினர் என்றா இருந்தோம்.
நமக்குள் பிரிவினைகள்—மதத்தின்
பெயராலும், மொழியின் பெயராலும், என்ணங்களின்
--தோன்றவே இடம்
கொடுத்தோம்.. அந்தப் பழைய
நிலைக்கு இந்தியா மீண்டும்
ஆளாகவேண்டும் என்று நினைப்பவர்கள்தாம் ஆங்கிலம் வேண்டாம் என்கிறார்கள்.
நமக்கு ஆங்கிலத்தை விட்டால் வேறு இணைப்பு மொழி
உண்மையாக
இன்னும் ஏற்படவில்லை.
இந்தி தயாராகிவிட்டது என்பது ஏமாற்று வித்தை.
மொழிவாரியாக இந்தியாவைப்
பூகோளரீதியில் துண்டாக்கிவிட்ட கேட்டிற்கு,
ஆன்கிலத்தை ஒழிப்பது
என்பது ‘சிந்தனை ஒன்றுடையாளைச் சிதறிப்போன
எண்ணங்களை உடையவளாக
மாற்றுவதேயன்றி வேறில்லை.
நமது மொழிகள்
இந்திய தேசிய மொழிகள் அனைத்தும் இலக்கியச்
சிறப்புள்ளவைகளாக நன்கு கருதப்படும் வாய்ப்பு நாளுக்குநாள் அதிகமாகிக்கொண்டு
வருவதை யரும் மறுப்பதற்கில்லை. இவற்றுள் பல ஏற்கனவே தற்படைப்புத் திறத்திலும் (originality), மொழியின்
மேம்பட்ட நிலையிலும் (Superiority of
language) சிறந்து விளங்குகின்றன. இலக்கிய
வரம்புக்கு உட்பட்ட நிலையில் இவை உலக மொழிகளுடன் தனித் தனியாக வைத்துஎண்ணப்படும்
அளவில் உயந்ர்துள்ள்தையும் கண்டு வருகிறோம்.. எனினும், விஞ்ஞானம்,
மருத்துவம்,தொழில்நுட்பம் ஆகிய வரம்புகளுக்குள் இவை சிறப்பாக வளரும் வாய்ப்புக்
குறைவாக இருப்பதை மொழி வெறியற்ற பலரும் கூட ஒப்புக்கொள்கிறார்கள்.
அவ்வாய்ப்புகள் குறைந்திருப்பதற்கான
காரணங்களைக் கீழ்கண்டவாறு தொகுத்துக் கூறலாம்.:-
1.
விஞ்ஞான, மருத்துவ,தொழில்நுட்ப நூல்கள் இந்நாளில் ஆங்கிலத்திலேயே
பெரும்பாலும் படைக்கப்பட்டு வருகின்றன. அவற்றைன் வேகத்திற்கு ஏற்பவும்,அல்லது அ்்வேகத்தில்
பாதியேனும் உலகத்து எந்த மொழியும் போட்டியிடக்கூடிய நிலையில் இல்லை.
இதைக் குிறித்து காலம் சென்ற ஹோமிபாபா அவர்கள் கூறுவதைக் கவனிப்போம்:
“The real problem is not static, but a dynamic one.
Science is progressing very rapidly today and as something of the order of one
worthwhile book is published on the average per day in English on some science
in the world before we will be in a position to make original contributions and
publish books at this rate. It must be remembered that this output in English
is not the achievement of one nation, but the achievement of several, including
those whose own national language is not English. For example, many eminent
Scadinavian, Dutch, and Italian scientists publish their books in English
today.”
2.
பிராந்திய மொழிக்கு மாறவேண்டும் என்று கூறுகிறவர்கள் மொழிபெயர்ப்புகளை
மட்டுமே நம்பியிருக்கவேண்டும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போலத் தெரிகிறது. அந்த நுண்ணிறிவுக்
கல்விகளை ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கும் வேலை மிகக் கடினமாக இருப்பதையும், மொழிபெயர்க்கப்பட்டவை
என்று கூறப்படுபவை ஆங்கில மூலத்தைவிடக் கடினமாக இருப்பதையும் கண்டு வருகிறோம். ஆனால்
மொழிபெயர்ப்பு .எப்படி இருக்கவேண்டும் ஓர் அறிஞர் கூறுகிறார: “True translation is
in composition what expression is in painting” இந்த இலக்கணத்திற்கு ஒத்து வரும் மொழிபெயர்ப்புகள்
நம்மிடையே மிகவும் குறைவு. ஆங்கிலத்தை எப்படியாவது ஒழித்துக்கட்ட வேண்டும் என்கிற மனோபாவனையில்
செய்யப்படும் மேற்படி நடவடிக்கைகள் கேவலமாக இருப்பதை மறுக்கமுடியாது.
3.
மொழிபெயர்ப்பு நூல்களை உதவி நூல்களாக ஒவ்வொரு பிராந்திய மொழிக்காரனும்
அவசியமாக வைத்துகொள்ள முயற்சி செய்யவேண்டும்—ஓர் அகராதி போல என்றால் மிகையல்ல. அதற்காகச்
சிறப்புற மொழிபெயர்த்தல் நலத்தைத் தருவதாகும். ஜேம்ஸ் ராஸ் என்னும் பிரபல மொழிபெயர்ப்பாளர்,
“A translation, to succeed, must not violate simplicity on the one hand, nor
sink into tameness on the other” என்கிறார். இந்த முறையைத்தான் அவர் கையாளுவது வழக்கம்.
எளிமையும் இருக்கவேண்டும; அதே சமயத்தில் அந்த எளிமை மிகவும் சாதாரணமாகவும் போய்விடக்கூடாது.
அவ்வித மொழிபெயர்ப்புகளே இந்நாளுக்கு அவசியம்.
ஒரு மொழியில் இருக்கும் நுண்ணறிவை(genius) இன்னொரு மொழிக்கு
அப்படியே கொண்டு வருவதுதான் உண்மையான மொழிபெயர்ப்பு. இல்லாவிட்டால் ஒன்றை
imitation ஆகவாவது செய்யவேண்டும். இமிடேஷன் என்பது ஏறக்குறைய தற்படைப்புத் திறத்திற்கு
சமமானது என்று கூறலாம். அத்தகைய நூல்களைக்கூட நம்முடைய பிராந்திய மொழிகளில் காண்பது
அரிதாக இருக்கிறது. ஜீனியஸ் என்பது கல்வித்துறையில் எவ்வளவு அவசியம் என்பதை பாரசீக
அறிஞர் ஷேக்ஸாதி கூறுகிறார்: “Genius without education is the subject of our
regret and education without genius is labour lost.” நுண்ணறிவில்லாத கல்வி உழைப்பின்
இழப்பைக் கொண்டது என்பது எவ்வளவு தீர்க்கமான வார்த்தை! –மேற்கூறியவற்றால் நம் மொழிகள்
நுண்ணறிவுக் கல்விகளில் எவ்வளவு பின் தங்கியவை என்பதை ஓரளவு அறிய முடிகிறது.
உலகில் ஆங்கிலம்
இப்பொழுது நாம் ஆங்கிலத்தைப் பற்றிப் பேசுவோம். உலகத்தின் கலப்பு
மொழி அது. அதுவே அதனுடைய தனித்தன்மை. ஆங்கிலம்.பிறவா முன்னர் உலகின் பல மொழிகள் எல்லவிதச்
சிறப்புகளுடனும் வளர்ந்து வந்துள்ளன. மருத்துவம், விஞ்ஞானம் முதலிய துறைகளில் பாரசீகம்
பல நாடுகளுக்கு வழிகாட்டியாக இருந்து வந்திருக்கிறது என்பதை வரலாற்றின் மூலமாகக் காணலாம்.
பழைய கிரேக்க நாட்டில் வாழ்ந்த Hippocrates என்னும் பௌதிக விஞ்ஞானி பாரசீக மொழியிலிருந்து
தமது மருத்துவ அறிவை வளர்த்துக்கொண்டார் என்பதற்ாான ஆதாரம், அவர் தம் மருந்துகளுக்குப்
பாரசீக மொழியிலிருந்த பெயர்களையே வைத்துள்ளார் என்பதாகும். கலேன் (galen), டயாஸ்கொரிடஸ்(Diascoridas),
என்னும் கிரேக்கர்களும், ரோமர்களும் அவ்வாறே சொற்களைப் பாரசீகத்திலிருந்து அள்ளிக்கொண்டனர்.
அச்சொற்களை galenicals என்று அழைக்கின்றனர். அவர்கள் மட்டுமல்ல, அராபியர்களும் பாரசீகத்திலிருந்து
நிறையச் சொற்களை அள்ளிக்கொண்டனர்.
அதே போலத்தான் ஐரோப்பிய நாட்டில் வளர்ந்த ஆங்கிலமும் பல மொழிகளிடமிருந்து
சொற்களைப் பெற்றுக்கொண்டது. உதாரணமாக, Chemistry என்னும் சொல்லைக் கவனிப்போம். அதன்
பாரசீக வடிவம் Kimiya என்பதாகும். அச்சொல் art, trick, imposture, chemistry என்னும்
அர்த்தங்களில் வரும் என்பர். இராசாயன நூலில் பாரசீக, இலத்தீன், கிரேக்க மொழிச் சொற்கள்
எண்ணிக்கைக்கு அடங்காத அளவில் உள்ளன. மருத்துவ நூலிலும் அவ்வாறே. வெப்படுத்துதல், குளிர்ச்சி
செய்தல்,ஆவியாக்குதல் என்னும் நிகழ்ச்சிகளைத்தான் மொழிபெயர்க்க முடியும். ஆகையால் அவைகளை
மட்டும் தமிழாக்கிவிடுவதனால், தமிழில் அல்லது வேறு எந்தப் பிராந்திய மொழியில் படிக்கும்போது
புரிகிறது என்று கூறுவது அறியாமை. வேண்டியது அறிவுதான்; ஆங்கிலத்தில் கற்றால் உலக முழுவதும்
தொடர்புகொள்ளலாம் என்னும் ஒரு பயன் இருக்கும்போது அதை ஒதுக்குவது தவறான செயலாகும்.
இந்தியாவில் ஆங்கிலம்
இந்த இடத்தில் டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் அ்வர்களைத் தலைவராகக்
கொண்டிருந்த பல்கலைக்கழக கல்விக் கமிஷன் சில ஆண்டுகளுக்கு முன்பு ‘Study of
English’ என்னும் தலைப்பில் வெளியிட்ட அறிக்கையைத் தருவது பொருத்தமாயிருக்கும் என்று
எண்ணுகிறேன்.
அது கூறுவதாவது—
“எவ்வாறாயினும் (இந்தியாவில்) ஆங்கிலம் தொடர்ந்து கட்டாயமாகப்
படிக்கப்படத்தான் வேண்டும். அது இ்லக்கியம், சமுதாயவியல், அறிவியல், தொழில்நுட்பம்
முதலியவற்றில் உயர்ந்த மொழியாகத் திகழுகிறது. நம்முடைய உணர்ச்சிகளுக்காக அம்மொழியைத்
தள்ளிவிட்டோமானால், நிரோட்டம் போல் உலகில் தடையின்றி வளர்ந்து வரும் ஒரு மொழியின் வாழ்க்கையிலிருந்தே
நம்மைப் பிரித்துக்கொள்வோம் ஆகின்றோம். இதை நாம் உணராவிட்டால் நம்முடைய அறிவின் தரம்
மிகவும் வேகமாக வீழ்ச்சியடைந்து, உலக நடப்புகளில் நமது சிந்தனைகள் அதிகம் பங்கு கொள்ளாமற்
போகும். அதனால் ஏர்படும் விளைவுகள் நமது நடைமுறை வாழ்க்கையில் ஒரு பயங்கரமாக வந்து
விடியும். ஏனெனில் வாழ்ந்து வரும் நாடுகள் காலத்தி்ற்குத் தக்கவாறு வேகமாக நடந்துகொள்ளவும்,
அக்கம் பக்கத்தில் தோன்றும் சூழ்நிலைகளுக்குத் தங்களைத் தயார்ப்படுத்திக் கொல்ளவும்
முடியாமற் போய்விடலாம். ஆகையால் அத்தகைய விளைவுகளைத்
தடுக்கும் சாதனம் ஆங்கிலம் என்பதில் ஐயமில்லை. அறியாமைத் திரைக்குள் கிடந்து விழிக்கும்
அளவுக்கு நாம் முட்டாள்கள் ஆகிவிடக்கூடாது. நாம் நம்முடைய காலத்தின் யுக தர்மத்தைக்
கடைப்பிடிக்கவேண்டும்.. கல்வி ஒருமைப்பாட்டை உணரவைக்கும் மொழியாகத் திகழும் ஆங்கிலம்
நமது மொழிகள் அனைத்தையும்விடச் சிறப்பானதாக இருப்பது நமக்கும் நம் மொழிகளுக்கும் மிகுந்த
உதவியைப் பயப்பதாகும்.”
முடிவுரை
இதுகாறும் நான் ஆங்கிலத்தின் இடம் பற்றிக் கூறியிருப்பதைக் கண்டு
சிலடர் எனக்குப் ‘பறங்கிமொழிப் பக்தன்’ எனப்
பட்டம் கொடுக்க முனைந்து, என்னுடைய தமிழ்ப்பற்றைக் குறை கூற முயலுவார்கள்.. நான் தமிழின்பால்
பற்றுடையேனே தவிர வெறியுடையனவல்ல. வெறியுள்ளவர்கள் மொழிப்பிரச்னைக்கு என்றுமே தீர்வு
காண முடியாது. இந்தியா ஒன்றுபட்டிருக்க, சிறப்புகள் எய்த கல்வியின் உயர் மட்டத்தில்
ஆங்கிலமே தகுதியுள்ளது.. அதைத் தவிர வேறு எந்தப் பிராந்திய மொழியாவது நுழையுமேயானால்
அன்றே நாம் கட்டை வண்டிப் பயணத்தை மீண்டும் தொடங்கிவிட்டோமென்று பொருள்.
*****
No comments:
Post a Comment