மனதாலும்
ஏழைகளே
சிலருக்குக் கல்வி
எளிதாய் வாய்த்துவிடுகிறது
சிலரை அது
தீண்டத்தகாததாய்
ஒதுக்கிவிடுகிறது
தீண்டாத பரம்பரை
வேண்டியதாகிவிட்டது
வேண்டாத சாதி
தீண்டாததாகிவிட்டது
நிதி ஒரு பொருட்டல்ல
சாதிதான் இங்கே
முக்கியமாய் போய்விடுகிறது
நிதி இருப்பவர்கள்
மதி இருந்தால்
கல்வியை
அடைந்துவிடுகிறார்கள்
சாதி ஒதுக்கீட்டால்
படிக்கக் கிடைத்தவர்களுக்கு
மெத்தனம்
வந்துவிடுகிறது
எதுவும்
வாராது வந்தால்தான்
மதிப்பு தெரியும்
போக வர பஸ்
சாப்பிட சாதம்
எல்லாம்
இலவசம் என்றால்
அருமை தெரிவதில்லை
ஏழைமை கொடிதுதான்
ஆனால்
மதிப்பு தெரியாமல்
இருப்பவர்கள்
மனதாலும் ஏழைகளே
No comments:
Post a Comment