Writer and Educationist எழுத்தாளர் கல்வியாளர்

Wednesday, September 19, 2018

என் கவிதைகள் 11


மனதாலும் ஏழைகளே

சிலருக்குக் கல்வி
எளிதாய் வாய்த்துவிடுகிறது
சிலரை அது
தீண்டத்தகாததாய்
ஒதுக்கிவிடுகிறது
தீண்டாத பரம்பரை
வேண்டியதாகிவிட்டது
வேண்டாத சாதி
தீண்டாததாகிவிட்டது

நிதி ஒரு பொருட்டல்ல
சாதிதான் இங்கே
முக்கியமாய் போய்விடுகிறது

நிதி இருப்பவர்கள்
மதி இருந்தால்
கல்வியை
அடைந்துவிடுகிறார்கள்

சாதி ஒதுக்கீட்டால்
படிக்கக் கிடைத்தவர்களுக்கு
மெத்தனம்
வந்துவிடுகிறது

எதுவும்
வாராது வந்தால்தான்
மதிப்பு தெரியும்
போக வர பஸ்
சாப்பிட சாதம்
எல்லாம்
இலவசம் என்றால்
அருமை தெரிவதில்லை

ஏழைமை கொடிதுதான்
ஆனால்
மதிப்பு தெரியாமல்
இருப்பவர்கள்
மனதாலும் ஏழைகளே


No comments:

Post a Comment