Writer and Educationist எழுத்தாளர் கல்வியாளர்

Monday, September 17, 2018

ஒரு மழைநாள்


ஒரு மழை நாள்

தூரல் விழுந்து
மண்வாசம்
அது
பெருமழையாய்
மாறுகையில்
சந்தோஷம்
பழம் நினைவுகள்
சிறகடிக்கும்
ஆலங்கட்டிகள்
முதலில் சுவைத்த
இனிப்பிலா ஐஸ்க்ரீம்
எத்தனை கூச்சல்
காகம் போல்
நண்பர்களை அழைத்து
பொறுக்கும்போது
எத்தனை போட்டி
இப்போது மழைகளை
இரவில்தான்
வரவேற்கிறோம்
யாருக்கும்
பணி தடையுறாமல்
வாசனையுமில்லை
ரசிக்கும்
மனநிலையுமில்லை
அவசர யுகம்
எல்லோருக்கும்



No comments:

Post a Comment