ஒரு மழை நாள்
தூரல் விழுந்து
மண்வாசம்
அது
பெருமழையாய்
மாறுகையில்
சந்தோஷம்
பழம் நினைவுகள்
சிறகடிக்கும்
ஆலங்கட்டிகள்
முதலில் சுவைத்த
இனிப்பிலா ஐஸ்க்ரீம்
எத்தனை கூச்சல்
காகம் போல்
நண்பர்களை அழைத்து
பொறுக்கும்போது
எத்தனை போட்டி
இப்போது மழைகளை
இரவில்தான்
வரவேற்கிறோம்
யாருக்கும்
பணி தடையுறாமல்
வாசனையுமில்லை
ரசிக்கும்
மனநிலையுமில்லை
அவசர யுகம்
எல்லோருக்கும்
No comments:
Post a Comment