Writer and Educationist எழுத்தாளர் கல்வியாளர்

Monday, September 24, 2018

என் கவிதைகள் 14


இயற்கை இனிது

எது பிறந்தது முதலில்
அண்ட கோளங்கள்
இயற்கை வடிவம்
வெடிப்புற்று
புதிதாய் பெருக்கம்
ஒன்றிலிருந்து
மற்றொன்று
மற்றொன்றிலிருந்து
ஒன்றாய் வரிசை கட்டி
மரம் செடி கொடிகள்
சுழித்தோடும் ஆறு
நீலமாய் நீள் கடல்
குன்றும் மலையும்
நடுவில்
நாம் எங்ஙனம்
பிறப்பு இறப்பு
மறுபடி பிறப்பு
இறப்பதற்கே
பிறந்தோமா
ஆண்-பெண்-அலி
எதுவாகப் பிறந்தோம்
பெண் இயற்கை
ஆண் செயற்கை
பெண் ஏமம்
ஆண் காமம்
கூட்டமாய் குமுறலாய்
ஆட்டமாய் ஆனந்தமாய்
அறுசுவையாய் அற்புதமாய்
நாட்டம் தேட்டம்
அன்பு இயற்கை
பகை செயற்கை
பின்னதன்றோ
பூவுலகில் அதிகம்
இயற்கை வழிநின்றால்
இனிது உலகே

என் கவிதைகள் 13


புதிதாய் பிறக்க…

ஒலிகள்
வானில் பரவும்
காதிழந்தாலும் கேட்கும்
எண்ணத்தின் ஓசைகள்
நல்லொலி கேட்கின்
நல்மணம் பரவும்
நன்மனம் கொண்டாடும்
தீயொலி கேட்கின்
நெருப்பிட்டது போல்
பகை வளரும்
மனம் கசக்கும்
மந்திரங்கள் ஒலிகள்
அந்த
சப்தங்கள் தெய்வீகம்
உடலில் பரவும்
உன்மத்தம் விலகும்
கண்ணுள் மறையும்
கனவுகள் திறக்கும்
உள்மன விரும்பல்
வெளிமனம் ஏற்கும்
ஒலியின்றி 
அமையாது உலகு
ஓம்என்போம்
புதிதாய் பிறப்போம்



Sunday, September 23, 2018

என் கவிதைகள் 13


கிரிக்கெட் ரசனை

இந்தியர்கள்
கிரிக்கெட் பார்க்கிறார்கள்
அவர்களில் ரசனையுள்ளோர் எத்தனை?
ஒருவன் சொன்னான்
பார்ப்போர் முட்டாளென்று
சரிதான்
அவன் சொன்னது
95 சதவீதம்
முட்டாள்களே
Long on
Square leg
Gully
எதுவென கேளுங்கள்
இந்த சிம்பிள் இடங்களே
அவர்க்குத் தெரியாது
China man எதுவென
கேட்டால்
சொல்லத் தெரியாவிடில்
அப்புறம் என்ன ரசனை?
ரன்கள் கூட்டல்
மட்டும் தெரியும்
அதுவா ரசனை
பவுலர் எப்படி
வீச்சை மாற்றுகிறான்
பாருங்கள்
அடிப்பவன் சிலசமயம்
எத்தனை பவ்யமாய்
இடைவெளி பிடிக்கிறான்
கவனியுங்கள்
ரசியுங்கள்
டைட் பவுலிங்கில்
ஒரு ரன் அடிப்பது
சிக்ஸருக்குச் சமம்
ரசிக்கப் பழகுங்கள்
பேட்ஸ்மன் பவுலர்
இருவரையும்
பாராட்டுங்கள்
அவன் எந்த தேசத்தவன்
ஆனாலும்…
போங்கள்
முதலில்
வீரர்கள்  நிற்கும்
இடங்களை
கற்று வாருங்கள்
உங்கள் ரசனையே
மாறிவிடும்



Wednesday, September 19, 2018

என் கவிதைகள் 12


காலமும் கோலமும்

1947
காந்தி சொல் கேட்டு
‘ஈஸ்வர அல்லா’
எனப் பாடினோம்
இஸ்லாமியர்
மேன்மையுற்றனர்
கிறித்துவர்
மறித்தனர் நம்மை
நடுநிலையாய் இருந்ததில்
இந்துக்கள்
நடுவீதிக்கு வந்துவிட்டோம்
காந்தி சொன்னதால்
சாந்தி போயிற்று
இனி
“ஈஸ்வர விஷ்ணு’’
எனப் பாடுவோம்
2019
வருகிறது வருகிறது
வாக்கு வருகிறது
நடுநிலை
வகித்ததில்
நிலை குலைந்து
போய்விட்டோம்
நிம்மதி போயிற்று

நீள் துயில் வேண்டாம்
பட்டது போதும்
யார் இந்துக்ககளை
அரவணைக்கிறாரோ
அவர்க்கே ஓட்டு
மற்றவர்க்கு வேட்டு
சொல்வோம் ஜெய்ஹிந்த்
வெல்வோம் நாமே


என் கவிதைகள் 11


மனதாலும் ஏழைகளே

சிலருக்குக் கல்வி
எளிதாய் வாய்த்துவிடுகிறது
சிலரை அது
தீண்டத்தகாததாய்
ஒதுக்கிவிடுகிறது
தீண்டாத பரம்பரை
வேண்டியதாகிவிட்டது
வேண்டாத சாதி
தீண்டாததாகிவிட்டது

நிதி ஒரு பொருட்டல்ல
சாதிதான் இங்கே
முக்கியமாய் போய்விடுகிறது

நிதி இருப்பவர்கள்
மதி இருந்தால்
கல்வியை
அடைந்துவிடுகிறார்கள்

சாதி ஒதுக்கீட்டால்
படிக்கக் கிடைத்தவர்களுக்கு
மெத்தனம்
வந்துவிடுகிறது

எதுவும்
வாராது வந்தால்தான்
மதிப்பு தெரியும்
போக வர பஸ்
சாப்பிட சாதம்
எல்லாம்
இலவசம் என்றால்
அருமை தெரிவதில்லை

ஏழைமை கொடிதுதான்
ஆனால்
மதிப்பு தெரியாமல்
இருப்பவர்கள்
மனதாலும் ஏழைகளே