இரும்பாய் ஒருவன்
பிரிந்து கிடந்தது இந்து நாடு
விடுதலை தந்தான் வெள்ளையன்
அவன் மனதில் குதூகலம்
இவர்கள்
ஒன்றாக முடியாதென எண்ணினான்
நகைத்தான் லண்டனில்
எட்வினா தோழன்
ஏதுமறியாது நின்றான்
காஷ்மீரத்தைப் பறிகொடுத்தான்
அதைப் பார்த்து
குட்டி ராஜாக்கள்
கும்மாளமிட்டனர்
அவன் வந்தான்
உடல்தான் தோல்
மனமோ இரும்பு கெட்டது
பேச்சினால் சிலரை
ஒன்றாக்கினான்
கேரளம் வீழ்ந்தது
ராஜஸ்தானம் மைசூர் சேர்ந்தன
இன்னும் பல பல
ஒன்றாயின
நடுவில் ஒரு நிஜாம்
நிஜ அரசன் நானென்றான்
பாக்கை துணைக்கழைத்தான்
பார்த்தான் இரும்பன்
படையை ஏவினான்
நவ துவாரமும் மூடி
மண்டியிட்டது நடுநாடு
அவன் இல்லையெனில்
இன்றைய நாமில்லை
கோமகன் சிலை திறப்பு இன்று
கோலாகல கொண்டாட்டம்
வாழ்க உயரமாய்
மண்ணுலக மீதில் என்றும்
No comments:
Post a Comment