காமம் எதனால்
வளர்ப்பு மகளையே
மணந்தவர், அவள் ஒன்றும் படிதாண்டா பத்தினி அல்ல என்றவர், அவள் என் மகளின் தாய் என்றவர்
போன்றோரின் திராவிட கலாசாரத்தில் விழுந்தவர்களும், திரைத்துறை போன்ற எளிதாய் பழகப்
பெண்டிர் கிடைக்கும் வாய்ப்புகள் இருப்பவர்களும் படி தாண்டும் ‘பத்தனன்’ களாக இருப்பதில்
வியப்பில்லை.
வீட்டில் அந்த
சுகம் கிடைக்கும் பட்சத்தில் ஆண் வேறிடம் செல்வதில்லை. ஆனால் மனைவி என்பவள் தானாக சுகம்
கேட்பதில்லை. பெண்களில் காம வசப்படுவோர் 2 சதவீதம்தானமிருப்பார்கள். ஆணுக்கு எப்போதுமே
ஸ்டார்டிங் டிரபிள்தான். ஒன் வே டிராபிக் என்றுகூடச் சொல்லலாம். ஆனால் நடுவில் டூ வே
டிராபிக் ஆவது சந்தோஷம்தான். ஆணாக கூப்பிட்டாலொழிய மனைவி கூட முதலில் வருவதில்லை. இதில்
கலாச்சாரம் இருப்பது நன்மைக்குத்தான்.
மனைவி என்பவள்
தாசியாக செயல்படும் நேரமிருக்கிறது என்று சொல்வார்கள் என்று மு. வ அவர்களின் நூலில்
படித்திருக்கிறேன்.
நான் வைரமுத்துவைப்
பார்த்துப் பரிதாபப் படுகிறேன். வீட்டில் அவர் மனைவி சாமியார் போல் ஆகிவிட்டார் என்கிறார்கள்.
அத்தகைய மனைவிகள் இருக்கும் ஆண்கள் படி தாண்டுவதில் வியப்பில்லை. எல்லோரும் கமலஹாஸன்கள்
அல்ல எப்போதும் ஒரு லிவிங் டுகெதர் பெண்களை வைத்துக்கொள்ள. இந்த விஷயத்தில் வெளிப்படையாக
இருப்பதற்கு அவரை பாராட்டுகிறேன். பெண்ணின் சம்மதத்தோடு அது சாத்தியமாகிறது. குற்றம்
சொல்வதற்கில்லை.
இது இன்டர்னெட்
உலகம். விரல் நுனியில் பாலுறவு வீடியோக்கள் வந்து விழுகின்றன. அதில் நடிப்பவர்களைப்
பார்க்க கூட்டம் அலை மோதுகிறது. அந்தப் பெண்களைப் போல் குடும்பப் பெண்கள் இல்லை. அதனாலாயே
அத்தனை ஆண்கள் கூட்டம். இன்றைய இளைஞர்கள் வக்கிற புத்தியுடன் இருக்க அதுவும் காரணமாகிவிடுகிறது.
பலாத்காரங்கள் நிகழக் காரணமாகிவிடுகிறது.
முன்பெல்லாம் இளைஞர்கள்
சரோஜாதேவி புத்தகங்கள் படித்தார்கள். இப்போது இணையத்தில் நேராகவே பார்த்துவிடுகிறார்கள்.
இருந்தாலும் நல்ல வழிகாட்டிகள் இருக்கவேண்டும். இப்போது பள்ளி மாணவர்கள் கையில் கணினி
கொடுப்பது ஆபத்தானது. பள்ளில் கொடுத்து அங்கேயே வாங்கி வைத்துக்கொள்ளவேண்டும். கம்ப்யூட்டர்
முன்னால் உட்கார்ந்து பணி புரிபவர்களின் ஆண்மை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது
என்கிறார்கள். சந்தான விருத்தி தாமதமாகிறது என்கிறார்கள். அவர்களுக்கும் தக்க அறிவுரைகள்
தேவை. செயற்கை கருவிகள் ரிமோட்டுடன் வந்திருப்பதை நெட்ஃப்ளிக்ஸில் படமாகப் பார்த்தேன்.
அது இன்னும் ஆபத்தானது.
இயற்கை வழிநின்று
வாழப் போகும் வாழ்க்கைதான் என்றும் சிறந்தது.
வேதம் செய்த குருவைக்கூட
விடுவதில்லை என்கிறார் கண்ணதாசன். அந்தப் பாட்டில் குரு என்கிற வார்த்தையை அந்தக் காலத்தில்
சென்சார் செய்தார்கள். கிராமாபோன் பிளேட்டில் குரு உண்டு. பாடல் வீடியோவில் இல்லை!!.மூடி
மறைக்க மறைக்க ஆவல் பெருகும். திறக்க திறக்க அதுவும் ஆபத்தாய் போய்விடுகிறது. நடுவில்
சம நிலையில் ஆண்கள் இய்ற்கையாய் நடந்துகொள்வது பெண்கள் , அதுவும் மனைவிகள் கையில் இருக்கிறது
No comments:
Post a Comment