Writer and Educationist எழுத்தாளர் கல்வியாளர்

Wednesday, October 31, 2018

இரும்பாய் ஒருவன்

இரும்பாய் ஒருவன்

பிரிந்து கிடந்தது இந்து நாடு
விடுதலை தந்தான் வெள்ளையன்
அவன் மனதில் குதூகலம்
இவர்கள்
ஒன்றாக முடியாதென எண்ணினான்
நகைத்தான் லண்டனில்

எட்வினா தோழன்
ஏதுமறியாது நின்றான்
காஷ்மீரத்தைப் பறிகொடுத்தான்

அதைப் பார்த்து
குட்டி ராஜாக்கள்
கும்மாளமிட்டனர்

அவன் வந்தான்
உடல்தான் தோல்
மனமோ இரும்பு கெட்டது
பேச்சினால் சிலரை
ஒன்றாக்கினான்

கேரளம் வீழ்ந்தது
ராஜஸ்தானம் மைசூர் சேர்ந்தன
இன்னும் பல பல
ஒன்றாயின

நடுவில் ஒரு நிஜாம்
நிஜ அரசன் நானென்றான்
பாக்கை துணைக்கழைத்தான்
பார்த்தான் இரும்பன்
படையை ஏவினான்
நவ துவாரமும் மூடி
மண்டியிட்டது நடுநாடு

அவன் இல்லையெனில்
இன்றைய நாமில்லை
கோமகன் சிலை திறப்பு இன்று
கோலாகல கொண்டாட்டம்

வாழ்க உயரமாய்
மண்ணுலக மீதில் என்றும்


Monday, October 29, 2018

Pilgrimage to Udipi and Dharmasthala 2



Pajaka Keshetra
2
 It was 3:30 pm.  From Adamar Mutt  the cab driver took us to Pajaka Kshetra, the birth place of Sri Madhwacharya. His original name was Vasudeva. His anchetral house is there. A big premise with trees and ponds nearby. He was the favorite son of his parents, especially mother. Even from childhood he showed his prowess like legendry Bheema , his former incarnation. When his mother asked him to cover milk vessel, he wielded a big rock to cover. That rock was of a big size.It is awesome to see. There are four ponds created by Parasurama where Vasudeva’s  mother bathed daily. 
They are : On the eastern side is Parasu Teertha, on the southern side is Dhanus Teertha, on the west is Gada Teertha and on the north is Bana Teertha. Taking bath in these teerthas is considered to wash out all the sins.
  Once his mother was not able take bath in those ponds due to illness. Vasudeva created a pond in his house itself for his mother. We sprinkled - prokshna of the holy water of the pond on our heads. A holy pond to this day. There is a stone where Vasudeva learnt his aksharabhysa. I also wrote on it Sri Gurubyo Namaha.
There is a tamarind tree and a story around it. Vasudeva’s father took a loan to buy a cow from a lender, but he was not able to pay the loan. The lender asked the inmates notto enter their house. Vasudeva took tamarind seeds and gave them to the lender and it became gold. Vasudeva’s father didn’t know about  it. When he met the lender to repay the loan, the latter said it had been  already paid by Vasudeva.
Once as a child Vasudeva playing on Durga betta (hill) and his mother called him for lunch. Vasudeva jumped to his house on a stone rock near his house in one jump. His foot print was fixed on impact. A shrine was built later by Sri Vadiraja there. Outside the shrine it was photographed. Inside it was dark. So we were not able to see the actual print. There is an Ananthapadbnabha temple.
My desire to see Sri Madhwa’s birth place was thus satisfied.
Then we visited Durga betta far away from Sri Madhwa’s  house and imagined how Vasudeva could have jumped in one jump from there. Durga matha is beautiful to see. The view from the hill is very fantastic.
Then we visited Ambalpady Janardhana-Mahakali temple. With her tongue protruded Mahakali is an ugra devata. We performed kumkuma archana there. All temples are maintained properly. Then we worshiped Janardhana devaru.

Sri Madhwacharya got two stone vigrahas of Balarama and Krishna at Malpe beach. He built a temple for Blarama at Vadabhandheswara near Malpe. We visited and worshipped Krishna’s elder brother.
We went to enjoy Malpe beach then. It was around 5:30 pM. The sun was setting on the Arabian sea.A nice scene indeed. Then we went to bak to Udipi Krishna temple again. AS my daughters wanted to eat at Woodland hotels just opposite to Adamaar Mutt, the dinner was delicious with the culmination of ice cream. WE returned to room.

Next morning we saw Vishwaoopa dharsan of Swamy. It is felt  to be experienced the view of Krishna in bare body. Even now Udipi Krishna in that form  is fixed in my mind’s eye.
At 9 we set out for Dharmasthala  (To be continued)

Pilgrimage to Udipi and Dharmasthala


Pilgrimage to Udipi and Dharmasthala
1.
We three went on pilgrimage to Udipi and Dharmasthala from Chennai between 27th and 29th in October. Though we had worshipped Sri Krishna three times before, we hadn’t been to Pajaka kshetra and other temples and Dharmasthala.  For, we went to Subramanya, Mookambika  then. Now that tourist programmes are at our will, everything has become possible. Udipi is a big city now with all facilities.

This visit was special to us because we were able to manage time as we travelled from Chennai by air to Mangaluru. First we thought of West Coast express and my elder daughter in Bengaluru also wanted to join us from there. My son in law suggested air travel to spend more time in the kshetras. Thus my elder daughter joined us from Bengaluru at Mangalore airport..

In 1980’s we four ie. My wife , two school going daughters and I had covered almost all khestras in India during  summer holidays. It was by trains and buses. One tour consisted of 22 days in summer. Others for 12 days. Train journey was very cumbersome then, but economical for a teacher like me.

I am 73 now and my daughters repay me by engaging us on tours.

I booked rooms at Sri Adamar Mutt in Udipi  . The Manager asked me on phone if I wanted cab facility. I agreed readily and at Mangalore Airport the cab was waiting for us on the arrival day. Sri Gopal Rao’s  sister , my sambanthi, suggested us to visit Mulki Ugra Narasimha temple on way to Udipi. As the driver knew all places in and  around Udipi, he diverted the cab to Mulki temple. A beautiful temple as it is, three deities are in one Shila rupa. People call this Sri Venkatanarayana temple. On Top
Sri Ventanarayana, in the middle Sri Ugra Narasimha and at the bottom Sri Krishna are in shila rupa there. Sri Krishna is the urchava murti. The temple premise is vast and Madhwa priests do pujas. We paid for a seva and the priests perform it sincerely, and not like TN pujaris who do in Dravidian style at Siva –Vaishnava temples. In all places Madhwa madi is famous and so they are sincere..

Then we continued our journey to Udipi as we wanted to see Sri Krishna in time and take Thirtha Prasada before 1 PM. We worshipped at the temple peacefully and I could see some changes in devotee management over the years  at the temple. At TP hall some Brahmin ladies, gents and children ate on the floor and not on banana leaf. It was a hareke done before or after fulfiment, said the lady who ate on the floor next to me. Providing food for devotees in batches after batches is service to God Krishna indeed. For general crowds there was another hall for TP.
At 3.30 the same driver took us to Pajaka Kshetra nearby. He said lot of sightseeing temples are around. He took us to all places. (Details later)
To be continued)

Sunday, October 21, 2018

சபரிமலை சாஸ்தா தரிசனம் 4


பள்ளி விட்டு ஒருநாள் வீட்டுக்குப் போனபோது, வேலைக்காரி ஜெயம்மா கையில் ஒரு பேப்பரை வைத்துக் கொண்டு வாசலில் உட்கார்ந்திருந்தாள். அதை வாங்கிப் படித்தேன். மனைவி மாத விலக்கு ஆனதைப் பற்றி அதில் இருந்தது. நான் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி விரிவாக இருந்தது. அவள் பெட்ரூம் கதவை மூடிகொண்டு உள்ளே இருந்தாள். நான் இனிமேல் சமையல் அறையில் கதவை மூடிகொண்டு இருக்கவேண்டும். நான் இல்லாத போது ஜெயம்மாதான் அவளுக்கு உதவி செய்தாள். அந்த மூன்று நாளில் நானும் அவளும் எவ்வளவு கஷ்டப்பட்டோம் என்பதைப் புரிந்து கொண்டிருப்பீர்கள்.
அடுத்த முறை விலக்குக்கு முன் என் மாமியார் அவர்களை வரவழைத்து விடுவது என்று முடிவு ஆயிற்று!
மேல்மருவத்தூரில் அம்மனையே  பெண்கள் தொட்டுக் கும்பிடலாமாம்! அதனால்தான் பெண்கள் கூட்டம் அங்கு அலைமோதுகிறது போலும்! பெண்கள் பிறந்த ஆசாரமான வீடுகளில் இது எவ்வளவு கடினம்! அதுவும் அவர்கள் வயதுக்கு வந்துவிட்டால்! 
   ஐயப்ப விரதத்தில் இந்த மாதவிலக்கு பிரதானமாகக் கருதப்படுவதால்தான் 10-50 வயதுப் பெண்களுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. விரதம் இருக்கும் வீடுகளில் இது பெண்களாலாயே மனவுவந்து ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அவர்கள் பக்தியில் எந்தக் குறைப்பாடுமில்லை. இப்போது மாற்று மததவர் வீம்பாக சந்நிதானம் வருகிறார்கள். இது மதச் சட்டத்தை மீறுதலாகும். சில வீம்பு பிடித்த இந்துப் பெண்களும் அறியாமை காரணமாக வரத் துடிக்கிறார்கள். பொறுமை இல்லாத பக்தி வீண்தான். நல்ல இந்துப் பெண் மாதவிலக்கான நேரத்தில் எந்தக் கோயிலுக்கும் போகமாட்டாள்.


விரதம் இருந்ததில் நான் ஐந்து கிலோ குறைந்துவிட்டேன். முகத்தில் தாடி வளர்ந்து என் தோற்றமே மாறிவிட்டதில், பக்கத்தில் வர குழந்தை தயங்கினாள். முன்பெல்லாம் பள்ளியில் மாணவர்கள் தவறு செய்தால் மிகவும் கடுமையாகத் திட்டுவேன். இப்போது சாந்தம் குடிகொண்டு கடும் வார்த்தைகளே வராமல் பார்த்துக் கொண்டேன்.
என் மாமியார் ஹேமாபாய் சென்னையிலிருந்து மகளுக்கு உதவி செய்ய வந்துவிட்டார். அதனால் இரண்டாவதாக மனைவி விலக்கான போது நான் கஷ்டப்படவில்லை. ஒரு நாள் மாமியார் என் காபியில் சர்க்கரை என்று எண்ணி உப்பை போட்டுவிட்டார்! மற்ற சமயம் மனைவி இப்படி செய்திருந்தால் ஆர்ப்பாட்டம் செய்திருப்பேன். செய்தது மாமியார். நாசூக்காகச் சொன்னேன். அந்த அளவுக்கு பொறுமையின் சிகரமாக மாறியதில், இன்றளவும் எனக்கு கோபம் வருவதில்லை.

வாணியம்பாடிக்கு ஒருமுறை நடுவில் குருசாமி வீட்டுக்கு பஜனைக்குப் போனேன். அவ்வளவுதான். திருப்பத்தூர் சங்கர மடத்தில் இருமுடி கட்டும் தேதியை குருசாமி சொன்னார்.
ஐயப்ப விரதம் இவ்வளவு பேரைக் கவர்ந்திருப்பதற்கு காரணம் அந்த பஜனையின் போது கண்டுபிடித்தேன்! பிராமணரல்லாதார் அனைவரும் தங்களை ஒரு பிராமணனைப்  போன்று நடந்துகொள்வதற்குச் செய்யும் பாவனைதான் அது! அவர்கள் உள் மனதில் அவ்வாறான எண்ணம் இருக்கிறது போலும். ‘தொடாதே, நான் மடி’ என்று தங்கள் சொந்தங்களை அவர்கள் விரட்டும் போது நமுட்டுச் சிரிப்பு வந்தது. சில சாமிகள் நல்ல குரலில் பாடும்போது, அங்கு பக்தி வாடை வீசும்.  சில குருசாமிகள் விரதத்தை வியாபார நோக்குடன் அணுகுவதை பல ஆண்டுகளுக்கு முன்பே பார்த்துவிட்டேன். ’நம் வரையில் ஒழுங்காக இருந்தால் சரி’ என்று திருப்பத்தூர் சாமி சொன்னபடி நான் 60 நாள் விரதம்  இருந்தேன். இருமுடி கட்டிக் கொண்டு திருவனந்தபுரம் போகும் ரயிலில் ஜோலார்பேட்டையில் ஏறி செங்கோட்டையில் இறங்கி, எருமேலி சென்றோம்.

அங்கு பேட்டைதுள்ளல் நடக்கும் போது நான் சரியாக குதிக்கவில்லை. அது ஒரு பிசிகல் எக்ஸசைஸ். ஆனால் நான் சங்கோஜப் பட்டுவிட்டேன். 42 கி.மீ நடக்கையில் தொடைகள் வலித்தன. (இரண்டாம் முறை சென்றபோது, ஒரு சாமியுடன் ஜோடி சேர்ந்து நன்றாகத் துள்ளினேன். அந்தமுறை மலையேறுவது கடினமாக இல்லை!). காட்டு வழியில் விதவிதமான மரங்கள். ஒற்றையடிப் பாதையில் போகும்போது, அவற்றின் வேர்களை மிதிப்பதும் ஒருவகை உடல்நலம் சார்ந்த மருத்துவக் கருத்துதான். காட்டில் தமிழ் எழுத்துக்களில் ‘சாராயம் கிடைக்கும்’ என்று ஒரு மரத்தடியில் மேஜை போட்டு வியாபாரம் நடந்துகொண்டிருந்ததைப் பார்த்து மனதில் வேதனை உண்டாயிற்று. அந்த அளவுக்கு தமிழர்கள் பலவீனமானவர்களா?  

எங்கள் குருசாமி மலையாள தேசத்தவர் அல்லவா? கோயிலில் அவருக்கு இன்ஃப்ளூயன்ஸ் இருந்தது. ஒரு நல்ல இடம் கிடைத்து அங்கே தேங்காயில் இருந்த நெய்யை ஒரு பாத்திரத்தில் ஊற்றும் சடங்கு ஆரம்பமானது. குருசாமி ஒவ்வொருவரையும் அந்த நிகழ்ச்சியின் போது எதிரில் சரணம் சொல்லிக் கொண்டு உட்காரச் சொன்னார். ஒரு சாமியின் தேங்காய் அழுகிவிட்டிருந்தது! அந்த நெய் ஸ்வாமிக்குப் போகவில்லை. அந்த நபர் ’ஐயோ சாமி நான் எந்த குற்றமும் செய்யவில்லை!’ என்று அலறினார்! அதைப் பார்த்து சில சாமிகள் பயந்துபோனார்கள். சிலர் அவரவர் தேங்காய்க்கு எதிரில் உட்காரத் தயங்கி , தேங்காய்களைக் கலந்து விடலாம் என்றார்கள். குருசாமி இதை ஓட்டுக்கு விட்டார்! ’இஷ்டம் இருக்கிறவர்கள் எதிரில் உட்காரலாம், இஷ்டம் இல்லாதவர்களின் தேங்காய்கள் கலந்துவிடப்படும்! நெய் கெட்டுப் போனால், சரியாக விரதம் இருந்தோமா என்று அவரவர் மனசாட்சிக்கு தெரியும்’ என்றார். 40 பேர் இருந்தோம். அதில் என்னையும் சேர்த்து ஆறு பேர்தான் இஷ்டம் என்று எதிரில் உட்கார்ந்தோம்! என் தேங்காய் நெய் நன்றாக இருந்தது! ஐயப்பன் மேல் அந்த சமயத்தில் எனக்கு உண்மையான பக்தி தோன்றி என் உடல் சிலிர்த்தது! அந்த அனுபவம் மறக்க முடியாதது. மற்ற ஐவருடைய நெய்யும் நன்றாக இருந்தது! பதினெட்டுப் படியில் ஏறி இறைவனைக் கண்டபோதும் உடல் சிலிர்த்தது.

பத்து வருடம் கழித்து இரண்டாவது முறையாக சென்றேன். அத்துடன் என் ஐயப்பனை தேடல் முடிந்தது. அங்கே நடைபெறும் சில அசுத்தங்களைப் பார்த்து மனம் வெறுத்ததால் மூன்றாவது முறை போகவில்லை. இப்போது நிலைமை எப்படியோ?
விரதம் இருப்பது மனக்கட்டுப்பாட்டுக்குத்தான். ஐயப்ப விரதத்தை அவர்கள் கூறுகிறபடி செய்வது என்பது ஒரு சவால்தான். நம் மனத்திண்மையைச் சோதிக்கும் அளவுகோல் இந்த விரதம் என்று சொல்லலாம். ஆனால் இப்போது சில சாமிகள் விரதம் இருப்பதாகவே தெரியவில்லை. பெண்ணைத் தொடுவதைத் தவிர எல்லா வரம்புகளியும் அறியாமை காரணமாக மீறுகிறார்கள்.இஷ்டப்படி வரம்பு மீறுகிறார்கள். அவர்கள் சபரிமலை செல்வது வீண்தான் என்று தோன்றுகிறது.


Saturday, October 20, 2018

நான் எழுத்தாளனானேன்


நான் எழுத்தாளனானேன்

1956ல் நாங்கள் திருப்பத்துருக்கு வந்தோம். ஆறாம் வகுப்பில் சேர்ந்தேன். எனக்குத் தமிழ் தாய்மொழியில்லை. எதிர் வீட்டில் என்னுடன் படித்த   வக்கீல் பையன் பிராமணத் தமிழ் பேசினான். நானும் அவனும் ஒரே வகுப்பு..எனக்கு கிராமீய தமிழ்தான் தெரியும். ஏனெனில் எங்கள் வீட்டில் இப்போது கூட.பிராமணத் தமிழ் பேசமாட்டோம், அவர்கள் வீட்டில் ஆனந்த விகடன், குமுதம், கல்கி வாங்கினார்கள். பத்திரிகைகளின் அறிமுகம் அப்போதுதான் கிடைத்தது. அது அக்கிரஹாரம். அதனால் என் நண்பர்கள் எல்லோரும் தமிழ் பிராமணப் பையன்கள்.என் தமிழைக் கேட்டு என்னை விநோதமாகப் பார்த்தார்கள். “இங்கே வா!என்பதை நான் இங்க வாமேஎன்பேன். என்னடா இவன் மே போட்டுப் பேசறான் என்று சிரிப்பார்கள். பாத்துகினு, வந்துகினு என்றுதான் பேசுவேன். காரணம் கிராமத்தில் எங்கள் வீட்டுக்குவந்த விவசாயிகள் அப்படித்தான் என் அப்பாவிடம் பேசுவார்கள்.வட ஆற்காட்டு பாஷை அது. என் அப்பாவும் அவர்கள் மொழியிலேயே பேசுவார். என் அம்மா பாடுதான் திண்டாட்டம். 94 வயதில் இறக்கும் வரையில் அவருக்கு பிராமணத் தமிழ் வரவேயில்லை. தமிழ் எழுதப் படிக்க முயலவேயில்லை. பெங்களூரில் எட்டாம் வகுப்பு வரை கன்னடம் படித்தவர். ‘கினுபாஷைதான் எல்லோரிடமும். அவர் தன் பாஷை பற்றிக் கவலைப்படவும் இல்லை. மாமிகள் அம்மாவைப்  புரிந்துகொண்டார்கள்.
  
எதிர் வீட்டில் போய் விகடன் படிப்பேன். துப்பறியும் சாம்பு படக்கதை பிடித்துப் போயிற்று. விகடன் கைக்குக் கிடைப்பதே கஷ்டமாயிற்று. ஒருநாள் அந்தப் பையனிட்ம் சண்டை. அவன் விகடனை ஒளித்து வைத்துவிட்டான். எனக்கு உயிரே போன மாதிரி ஆகிவிட்டது. அதனால் அப்பாவிடம் விகடன் வாங்கு என்று நச்சரிக்க, அவர் ஆங்கில ஹிந்துவுடன் அதை வாங்கிப் போட்டார். வெள்ளிக்கிழமை பேப்பர் பாய் வரும் வழியை நோக்கித் தவம்.அதனால் 1956 முதல் 2008 வரை விடாமல் (பல ஊர்கள், வீடுகள் மாறினாலும்) வீட்டுக்கு வந்த விகடனை, அதன் தற்போதைய கொள்கை பிடிக்காமல் 2008ல் நிறுத்திவிட்ட நாள் இன்று. அதனால் அந்தப் பழைய நாள்களை பெருமூச்சுடன் நினைக்கவேண்டியதாகப் போய்விட்டது.

 மணியன் அவர்கள் ஆசிரியராக இருந்தபோது முதல் கதையை எழுதிப்போட்டேன். அச்சடித்த கடிதம் ஒன்று விகடனில் இருந்து வந்தது; கதையை இன்னும் நன்றாக எழுதவும் என்று. அந்த வயதில் விகடனிடமிருந்தே கடிதம் மணியன் கையெழுத்தில் வந்தது என்று பெருமையாக்க காட்டினேன் எல்லோரிடமும்..என்னை உற்சாகப் படுத்திய கடிதம் அது. அதன் பிறகு விகடனை ஊன்றிப் படித்து எவ்வாறு கதைகள் எழுதப்படுகின்றன என்று பார்ப்பேன். ஒரு வெள்ளைத்தாளை எடுத்து, விகடனின் ஒரு பக்கத்தில் இருக்கும் கதையை காப்பி பண்ணுவேன். ஓஹோ, ஒரு பக்கம் இங்கே வெள்ளைத்தாளில் இத்தனை பக்கம் வருகிறதா என்று ஆராய்ச்சி வேறு! ஐயோ எனக்கு படம் போடத் தெரியாதே என்ற கவலை வேறு! ஓவியர்கள்தான் அதை வரைவார்கள் என்று அப்போது தெரியவில்லை.


கல்லூரி படிக்கும்போது பல பத்திரிகைகளுக்கு பல கதைகள் எழுதி திரும்பி வந்தன. 1967ல் ஆசிரியப் பணிக்குச் சேர்ந்தேன். அப்போது நா.பாவின் தீபம் பத்திரிகை ஒரு மொழிப்பிரச்னை கருத்தரங்கு நடத்திய போது என் கட்டுரை முதல் பரிசு பெற்றது. தீபம் என்று பொறித்த பார்க்கர் பேனாவை அந்தப் பத்திரிகை அலுவலத்தில், எழுத்தாளர் அகிலன் அவர்கள் வழங்கினார். நான் வியந்த தி. ஜானகிராமன், அசோகமித்ரன் ஆகியோரை அந்த நிகழ்ச்சியில் சந்தித்தேன். இன்னும் பல எழுத்தாளர்களை அங்கு பார்த்தேன். அதே வாரம் சாவி அவர்கள் ஆசிரியராக இருந்த தினமணி கதிரில் என் முதல் சிறுகதை “செஞ்சுரிநாதன்” வெளியானது. அதற்கு அடுத்த மாதம் பல பத்திரிகைகள் திருப்பிய கதை “அவரும் அவளும்” சிறுகதை கலைமகள் பத்திரிகை ஏற்றுக்கொண்டு பிரசுரித்தது. அப்போது முதல் இன்று வரை  பத்திரிகைகள் எப்படி கதைகளை ஏற்கின்றன, மறுக்கின்றன என்கிற ரகசியம் புரியவேயில்லை. தினமணி கதிர் எழுத்தாளனாகவே பல கதைகள் வந்தன.

2004ல் ஓய்வு பெற்றேன். ஆங்கில ஆசிரியனான நான் கல்கி ஆபீஸ் சென்று சீதாரவியிடம் என் இரண்டு அத்தியாயங்களைக் கொடுத்தேன். அவர் படித்துவிட்டு உதடைப் பிதுக்கினார். பிறகு விகடனுக்கு ஒரு கடிதம் போட்டேன்.அதைப் பார்த்துவிட்டு விகடனில் அவள் விகடன் பத்திரிகை ஆசிரியர் பேசுவார் என்றார்கள். 

அதன் படி இப்போது மல்லிகை மகள் ஆசிரியராகவுள்ள ம.கா.சிவஞானம் அவள் விகடன் பத்திரிகைக்காக தொலைபேசியில் அரைமணிநேரம் பேசினார். என்னை இரண்டு அத்தியாங்கள் மாதிரிக்குக் கொடுக்கச் சொன்னார். அப்போது விகடன் அலுவலகம் கிரீம்ஸ் சாலையில் இருந்தது. அங்கு போனேன். அத்தியாயங்கள் சிவஞானத்திற்குப் பிடித்துப் போய்விட்டது. நாங்கு கேரக்டர்களை மூன்றாகக் குறைத்து மறுபடியும் எழுதி வரச் சொன்னார். இரண்டு நாளில் மாற்றி எழுதி மீண்டும் அவள் விகடன் அலுவலகத்தில் அவரிடம் கொடுக்க அவர் ஏற்றுகொண்டார்.
அவள் விகடனில் 32 இதழ்கள் தொடராக என் ஆங்கிலம் பற்றிய கட்டுர்ரைகள் வந்தன. விகடன் புத்தகமாகவும் வெளியிட்டனர். 

நான்கு வருடங்களாக பிரசுரிப்பதை நிறுத்திவிட இப்போது “நீங்களும் பேசலாம் இங்கிலீஷ்” என்ற தலைப்பில் கிழக்கு பதிப்பகத்தில் கொடுத்திருகிறேன். இன்னும் சில அத்தியாயங்களைச் சேர்த்திருக்கிறேன். 2019 சென்னை புத்தக காட்சியில் இடம் பெறும்.
 A Dalit's Love, The Secrets of Awetosa are my English novels available as paperback and eBook in Amazon, Flipkart, Educreation
இப்போது என் FB, Blog தான் எழுதும் களம்.