இரவிதன் குலத்து எண் இல் பல் வேந்தர்தம்
பரவு நல் ஒழுக்கின் படி பூண்டது,
சரயு என்பது தாய் முலை அன்னது, இவ்
உரவு நீர் நிலத்து ஓங்கு உயிர்க்கு எலாம்.
பரவு நல் ஒழுக்கின் படி பூண்டது,
சரயு என்பது தாய் முலை அன்னது, இவ்
உரவு நீர் நிலத்து ஓங்கு உயிர்க்கு எலாம்.
கம்பன் வருணித்த சரயு நதி முன்னால் நின்றிருந்தேன். அது 1986 ம் வருடம். ஒரு யாத்திரைக் குழுவில் என் குடும்பம் பயணித்தது. அயோத்தியில் ஒவ்வொரு இடமாகப் பார்த்தோம்.
இராமன் பிறந்த இடம் என்று போய் பார்த்தால் ஒரு பிரமாண்டமான பூட்டு இரும்பு கேட்டில் தொங்கியது. உள்ளே கல் தூண்களின்மேல் கறுப்பாய் ஒரு மசூதி. பாபர் என்ற பாபம் செய்தவன் எழுப்பிய கட்டிடம் அவன் ஒரு மூர்க்கன் என்று பறைசாற்றியது. என் மனத்தில் ஒரு பதட்டம்.
ஒரு இதிகாசம் தோன்றக் காரணமாயிருந்த இரவிகுலத்து வேந்தன், வற்றாமல் பால் சுரக்கும் தாயின் மார்பு தன் குழந்தையின் பசியைப் போக்குவதைப் போன்ற சரயு நதிக் கரையின் விளையாடிய கோமான், ஒழுங்காய் தினமும் உதிக்கும் சூரியனின் வழித்தோன்றல் பிறந்த இந்த நாட்டில் அவனுக்கொரு ஆலயம் எழுப்ப இத்தனை இல்லல்களா என்று முதன் முதலாக அன்று வேதனைப்பட்டேன்.
கோயில்கள் பற்றிய என் எண்ணம் அப்போதுதான் பல சிந்தனைகளை எழுப்பியது.
கோயில்கள் பற்றிய என் எண்ணம் அப்போதுதான் பல சிந்தனைகளை எழுப்பியது.
“கோயில் முழுதும் கண்டேன் – உயர்
கோபுரம் ஏறிக் கண்டேன்
தேவாதி தேவனை யான் – தோழி!
தேடியும் கண்டிலனே”
-என்கிறார் கவிமணி தேசிய விநாயகம் பிள்ள.
அவரே பதிலும் சொல்கிறார்:
கோபுரம் ஏறிக் கண்டேன்
தேவாதி தேவனை யான் – தோழி!
தேடியும் கண்டிலனே”
-என்கிறார் கவிமணி தேசிய விநாயகம் பிள்ள.
அவரே பதிலும் சொல்கிறார்:
“உள்ளத்தில் உள்ளானடி! -அது நீ
உணர வேண்டுமடி
உள்ளத்தில் காண்பாய் எனில் – கோயில்
உள்ளேயும் காண்பாயடி!”
உணர வேண்டுமடி
உள்ளத்தில் காண்பாய் எனில் – கோயில்
உள்ளேயும் காண்பாயடி!”
அன்று அயோத்தியில் சில ராமாயணம் நடந்த இடங்களுக்குப் போனேன். ஆனால் எனக்கு நம் தென்னிந்திய கோயில்களில் உள்ளதைப் போன்ற கடவுளர் சிலைகள் இல்லாமல், பளிங்கில் செய்த மூர்த்திகள் மனதைக் கவரவில்லை. இது என் நோக்கில் ஏற்பட்ட பிழையா அல்லது வேறா என்று தெரியவில்லை.
நம் கோயில்கள் மேரு மலை தத்துவத்தில் அமைந்துள்ளன என்று கர்ப்பகிரகம் அமைந்துள்ள நடுகோபுரமும், வாசல் கோபுரங்களும் பறைசாற்றுகின்றன. மூர்த்தி இருக்கும் நடு கோபுரம் அண்ட ரேகையினால் சொர்க்கம்-பூமி ஆகியவற்றை இணைக்கும்படி ஸ்தபதிகள் கட்டியிருக்கிறார்கள். பிராகாரங்களில் சுற்றும்போது அதன் கதிர்களும், ஆகர்ஷணசக்தியும் நம்மை ஆன்மீகப் பாதையில் இட்டுச் செல்லும்.
வாயளவில் மந்திரம் சொல்லி, மனத்தை எங்கோ செலுத்தி வழிபடுவது போன்ற முட்டாள்தனம் வேறில்லை. கோயில்களை வணிக வளாகங்களாக்கி புனிதத்தைக் கெடுத்ததில் சுதந்திரத்துக்குப்பின் வந்த அரசுகளுக்குப் பங்குண்டு. அதைவிட பரிகாரங்கள் என்ற பெயரில் மக்களைக் கெடுக்கும் ஜோசியர்கள் கடவுள்களை வெறும் வியாபாரப் பொருளாக்கிவிட்டார்கள்.
கோயிலில் சுத்தம் இல்லை. வணங்கப்போகும் மக்களிடமும் மனக்குவிப்பு இல்லை. பிக்னிக் போவதுபோல போகிறார்கள். நாத்திகவாதிகள் நடத்தும் தொலைக்காட்சி தமிழ் சீரியல்களில் கேவலமான பிறரை அழிக்கும் திட்டங்கள் தீட்டும் கதை மாந்தர்கள்-அதிலும் பெண்கள் ஒரு கோவில் பிராகாரத்தையா
தேர்ந்தெடுக்கவேண்டும்? பூங்கா இல்லையா, தனி மொட்டை மாடி இல்லையா?
கோயிலில் சுத்தம் இல்லை. வணங்கப்போகும் மக்களிடமும் மனக்குவிப்பு இல்லை. பிக்னிக் போவதுபோல போகிறார்கள். நாத்திகவாதிகள் நடத்தும் தொலைக்காட்சி தமிழ் சீரியல்களில் கேவலமான பிறரை அழிக்கும் திட்டங்கள் தீட்டும் கதை மாந்தர்கள்-அதிலும் பெண்கள் ஒரு கோவில் பிராகாரத்தையா
தேர்ந்தெடுக்கவேண்டும்? பூங்கா இல்லையா, தனி மொட்டை மாடி இல்லையா?
இதைத்தான் கவிமணி தேடினேன் காணோம் என்கிறார்.
ஆதி சங்கரரின் மாயாவாதமும், அதற்குப்பின் வந்த இராமாநுஜரின் திருத்தியவாதமும் தந்த அறிவை விரிவாக்கிய கடைசியாக வந்த மத்வர் எனப்பட்ட ஆனந்த தீர்த்தர் அகண்ட பாரதத்தை முன்னிறுத்தி செய்த வாதம் துவைதம் அல்ல.
அது பூரணத்துவ சித்தாந்தம்.
ஏனெனில் அத்வதம், விசிஷ்டாத்வைதம் துவைதம் என்ற வார்த்தைப் பிரயோகங்கள் பின்னால் சண்டை போட்டவர்கள் பிரித்துச் சொன்ன வார்த்தைகள்.
அதிலும் குறிப்பாக மத்வர் தமது “ மண்டூக பாஷ்யா” என்னும் நூலில் ‘துவைதம்’ என்றால் பொய்யறிவு என்கிறார்.
அதிலும் குறிப்பாக மத்வர் தமது “ மண்டூக பாஷ்யா” என்னும் நூலில் ‘துவைதம்’ என்றால் பொய்யறிவு என்கிறார்.
அவரே ஏற்காத வார்த்தையை அவருக்கே குறிப்பிடலாமா?
நான் ஆதிசங்கரர், இராமாநுஜர் ஆகியோரை இங்கு விட்டுவிடுகிறேன். எப்படி எடிசன் கண்டுபிடித்த பல்பிலிருந்து இன்று ஒளிமயமாய் ஆகிவிட்டோமோ அதைப்போல ஸ்ரீ மத்வர் ஏற்படுத்திய தத்துவம் காலங்களை வென்றதாகும். ஏனெனில் அவர் ஓர் ஆராய்ச்சி மாணவர் போல் வேதவியாசர் கொடுத்த வேதங்களை பூரணமாய் அறிந்தவர்.
தமது சிஷ்யர்களுக்கு ” அயிதர்ய பாஷ்யம்” நடத்துகையில் திடிரென மறைந்துபோனார். சிரஞ்சீவியாக பத்ரியில் வாசம் செய்கிறார். நான் அவர் மறைந்த இடத்தை உடுப்பியில் எப்படி பிரமிப்புடன் பார்த்தேனோ, அதை 1996ல் பத்ரி சென்ற போது இதுதான் அவர் வேதவியாசரைக் காண போன இடம் என்றார் கைடு. எதிரே வெள்ளிப் பனிமலை..அந்த பிரமிப்பு என்னுள் இன்னும் அடங்கவில்லை.
மத்வாசாரியார் கூறுகிறார்—-
கடவுள் பூரணமானவர்!!
நான் ஆதிசங்கரர், இராமாநுஜர் ஆகியோரை இங்கு விட்டுவிடுகிறேன். எப்படி எடிசன் கண்டுபிடித்த பல்பிலிருந்து இன்று ஒளிமயமாய் ஆகிவிட்டோமோ அதைப்போல ஸ்ரீ மத்வர் ஏற்படுத்திய தத்துவம் காலங்களை வென்றதாகும். ஏனெனில் அவர் ஓர் ஆராய்ச்சி மாணவர் போல் வேதவியாசர் கொடுத்த வேதங்களை பூரணமாய் அறிந்தவர்.
தமது சிஷ்யர்களுக்கு ” அயிதர்ய பாஷ்யம்” நடத்துகையில் திடிரென மறைந்துபோனார். சிரஞ்சீவியாக பத்ரியில் வாசம் செய்கிறார். நான் அவர் மறைந்த இடத்தை உடுப்பியில் எப்படி பிரமிப்புடன் பார்த்தேனோ, அதை 1996ல் பத்ரி சென்ற போது இதுதான் அவர் வேதவியாசரைக் காண போன இடம் என்றார் கைடு. எதிரே வெள்ளிப் பனிமலை..அந்த பிரமிப்பு என்னுள் இன்னும் அடங்கவில்லை.
மத்வாசாரியார் கூறுகிறார்—-
கடவுள் பூரணமானவர்!!
No comments:
Post a Comment