#ஒரு பாணத்தின்
கதை
நான் ஐந்தாம் வகுப்பு
வரையில் கிராமத்துப் பள்ளிக்கூடத்தில் படித்தேன். ஊரில் சிவன் கோயில் உண்டு. அதில்
கார்த்திகை தீபம் அன்று முதல் பூஜை சாயந்திரம் எங்கள் வீட்டுப் பூ, பழம் வைத்து தீபம்
ஏற்றுவார்கள். உடனே எங்கள் அக்கிரகாரத் தெருவில் எல்லார் வீட்டிலும் தீபங்கள் எரியும்.
எங்கள் வீடு இந்தத் தெருவில ஆரம்பித்தால் புழக்கடை பின்னால் இருக்கும் தெரு அருகே முடியும்.
நானும் என் நண்பர்களும்
தீபத்துக்கு ஒருவாரம் முன்பே பனம் புடுக்கு சேகரித்து, புழக்கடையில் காயவைப்போம். பின்னர்
அதை தூளாக்குவோம். ரொம்ப நைசாக அரைக்கக் கூடாது. மொறு மொறுவென்று இருக்கவேண்டும்..
பழைய கிழிந்து போன துணியைக் கோவணப்பட்டை போல் செய்து, தூள் செய்த கரி, பனம்புடுக்கு,
கல் உப்பு போன்றவற்றை போட்டு ஒரு எலி போல உருட்டி முக்காலடி நீளத்தில் கட்டுவோம். மூன்று
மரக் குச்சிகளை வெட்டி, அவற்றின் நடுவில் இந்த துணி மூட்டையை இறுக்கிக் கட்டி, குச்சிகளை
மேலும் கீழும் கட்டி, ஒரு கயிற்றால் ஒரு பக்கம் ஐந்தடி நீளத்துக்கு இணைத்து வைத்துக்
கொள்வோம்.
தீவிளி தயார்.
இதை வடார்க்காடு பாஷையில் பாணம் என்போம். அந்தத் தெருவில் ஐந்து பேராவது பாணம் வைத்திருப்போம்.
மின்சார வசதி இல்லாத
காலம்.
துணி உருளை மீது, கரி நெருப்பு வைத்தால், துணி பற்றிக்கொள்ளும்.
சிவப்பாய் தெரியும்.
சுற்றினால் தீப்பொறிகள்
மத்தாப்பு போல சுற்றும். தெருவில் நடப்பவர்கள் எங்களை மீறி நடக்கமுடியாது.
அந்த கார்த்திகை
தீப இரவில் இது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
ஒரு பாணம் அரைமணி
நேரம் பொறி வீசும்.
இருபது பிராமணர்கள்
இருந்த அந்த அக்கிரகாரம், இப்போது ஒரே ஒருவர்தான் இருக்கிறார். மற்ற சாதியினர் வந்துவிட்டனர்,
முஸ்லீம்கள் முதல் கொண்டு.
எங்கள் வீட்டையும்
அந்த பிராமணருக்குக் குறைந்தவிலையில் விற்றுவிட்டோம். அந்த ஊரில் கலைஞர் சமத்துவபுரம்
வீடுகளை இரண்டு கி.மீ தள்ளி கட்டிக் கொடுத்துள்ளார். ஒரு வீடு பிராமணருக்கென்பதால்,
அதில் அந்தப் பிராமணருக்குக் கிடைத்திருக்கிறது. எப்போதும் அதை பூட்டி வைத்துள்ளார்.
No comments:
Post a Comment