1.
சாதி,
மதங்களை ஒப்புக்கொள்ளுங்கள்
வரலாறுகளைப் படித்துப்
பார்த்தால் இந்திய சமூகத்தில் மரணங்கள் நிகழ மதமும், சாதிகளும்தான் காரணங்களாக இருந்திருக்கின்றன.
அதுவும் ஆங்கிலப் படையெடுப்புக்குப் பின்தான் அதிகம் நிகழ்ந்திருக்கிறது. இஸ்லாமியன்
கொள்ளையடிப்பதில்தான் குறியாக இருந்தான். நமது பொக்கிஷங்கள் காணாமல் போயின. ஆங்கிலேயன்
சமூகங்களைப் பிரிப்பதில் கவனம் செலுத்தினான்.
கால்டுவெல்லை பின்பற்றும்
சில அறிவிலிகள் தலையில், பிறந்தவன், காலில் பிறந்தவன் என்று சாதிப் பிரிவினைகள் செய்துவிட்டர்கள்
என்று எதிர்த்துக் கூப்பாடு போடுகிறார்கள்.
நவீன சமுதாயத்தை ஐந்து
தலைமுறைகளாகப் பிரிப்போம். முதல் தலைமுறையில் காணப்பட்ட சாதிபேதம் இப்போது இருக்கிறதா?
பிராமணர்கள் மட்டும்தான்
தந்தை பெரியார் போன்றவர்களின் பிரசாரத்தால் சாதி பேதம் காட்டுவதில்லை. அது அவருக்குக்
கிடைத்த ஒரு மறைமுக வெற்றிதான். அதை அவரே கொண்டாடியிருக்கமாட்டார். ஆனால் அவர்களைத்
தவிர வேறு எந்த சாதிக்காரனாவது தன் சாதியை விட்டிருக்கிறானா?
நான் தலைமை ஆசிரியராகப்
பணிபுரிந்த அந்தக் கிராமப் பள்ளியில் ஆறாம் வகுப்புச் சேர்க்கைக்காக வருவார்கள். அவர்களின்
மூத்த பையனோ, பெண்ணோ அகமுடையர் அல்லது பலிஜா
நாயுடு சாதி என்று என் பள்ளியிலேயே படிப்பார்கள். .இன்னொரு பிள்ளையை அவர்கள் சாதி மாற்றி
அகமுடையர் வந்து வன்னியர் என்று சாதிசான்று
கொடுப்பார்கள். பலிஜா வந்து பெஸ்தா நாயுடு ஆகிவிடுவான்.
நான் கேட்டால் ,
“உங்களுக்கென்ன சார்..இதோ சர்டிபிகேட்” என்று
லஞ்சம் கொடுத்து வாங்கியதைக் காட்டுவார்கள்.
காரணம் இட ஒதுக்கீடு
கொள்கைதான்.
இங்கே எங்கு பிராமணன்
வந்தான்?
புருஷஸூக்தத்தில் வாயில்,
தோளில், தொடையில், காலில் பிறந்தார்கள் என்கிறது. மொத்தத்தில் ஒரு மனித உருவம் என்றுதான்
கொள்ளவேண்டும்.
இந்த நான்கு வர்ணத்தினருக்கும் எல்லா பாகங்களும்
உள்ளன.
அனைத்திலும் ஒன்று குறைந்தாலும் ஆபத்தில்லையா?
வாயால் பிறந்தவன்
பிராமணன் என்பது அவன் தொழிலைக் குறிக்கும். பிராமணன் என்றால் ஆசிரியன் என்று பொருள்
உண்டு.
இப்போது நான்கு வர்ணத்திலும்
ஆசிரியர்கள் இல்லையா?
பூணூல் போட்டவன் ஒரு
அலுவலகத்தில் கடைநிலை ஊழியனாக இருக்கவில்லையா? அவனுக்கு மானேஜராக, தலைவராக ஒரு எஸ்சி இல்லையா?
நான் கோயிலுக்குச்
சென்று கும்பிடும்போது பாதங்களைத்தான் கும்பிடுகிறேன். தலையில் கூட சடாரி வைக்கப்படுகிறது.
பாதங்களைப் பணிவோம் என்று சரணாகதி ஆகிறோம்.
பைபிளில் உலகம் தட்டையானது
என்பதை கலீலியோ மறுத்து அது உருண்டை என்று சொன்னதற்காக சர்ச் அவரை சிறையில் வைத்தது.. அவர் இறந்த 300 ஆண்டுகளுக்குபின் சர்ச்
அவர் சொன்னது சரி என்று ஒப்புக்கொண்டது.
ஆனால் நம் பழம் நூலான ஸ்ரீ மத் பாகவதம் அன்றே உலகம் உருண்டை என்று சொல்லிவிட்டது.
मूर्धन्यर्पितमणुवत्सहस्रमूर्न्घो ।
भूगालं सगिरिसरित्समुद्रसत्वम् । (SB 5.25.12)
இரண்டாவது வரியில்
“பூகோளம்” என்கிறது. பூ என்றால் பூமி, கோளம் என்றால் உருண்டை.. வராக அவதாரம் இதை உறுதிப்
படுத்துகிறது.
சர்ச் கலீலியோவை ஒப்புக்கொண்டதைப்
போல புருஷஸூக்தம் தலை-கால் என்று மேற்கோள்
காட்டுகிற பகுத்தறிவுவாதிகள் கடந்துபோய்விடுங்களேன். இன்னும் ஏன் பிடித்துக்கொண்டு தொங்குகிறீர்கள்? அந்நிய மதங்கள் இவர்களை 1930 லியே கூலி கொடுத்து வாங்கிவிட்டது. அப்போது சில ஆயிரங்களுக்கு விலை போனார்கள். இப்போது சில லட்சங்கள் பெறுகிறார்கள் போலும். தூங்குகிறவர்களை எழுப்பலாம். தூங்குவதைப் போல பாசாங்கு செய்பவர்களை எழுப்பமுடியாது. பாவ்லாவின் நாயைப் போல கண்டிஷனிங் ஆகிவிட்டார்கள்.
இப்போது எல்லோரும் எல்லா தொழிலும்
செய்கிறார்களே?
ஆனால் உங்களால் சாதிகளை
ஒழிக்கமுடியாது.
நாராயணகுரு எழவ சாதியில்
பிறந்தாலும் நல்ல ஆசானிடத்தில் சமஸ்கிருதம் படித்தவர். தமிழ் கூட அறிந்தவர். உண்மையான
வைக்கம் வீர்ர். அவராலேயே கேரளாவில் சாதியை ஒழிக்கமுடியவில்லை.
எங்கள் ஊர் திக நண்பர்களை
எனக்குத் தெரியும், அவர்கள் மகள்களுக்கு எப்படி கல்யாணம் செய்தார்கள் என்று. எனக்கு
பத்திரிகை கொடுப்பார்கள். அதில் 12 மணிக்கு ஒரு திராவிட தலைவர் முன்னிலையில் என்று
இருக்கும்.
காலை ஏழுமணிக்கு ஐயரை வைத்து ( மாப்பிள்ளை வீட்டார் கேட்டுகொண்டதால் என்பார்கள்) சாஸ்த்ரோக்தமாக அக்னி சாட்சியாய் கல்யாணம் செய்து விட்டு 12 மணிக்கு ஊர் தெரிய கல்யாணம். அது அந்த திராவிட தலைவருக்கும் தெரிந்திருக்கும். சில ஆயிரங்களை இந்த திட்டும் புதிய பகுத்தறிவு புரோகிதருக்குக்
கொடுத்திருப்பார்கள். அதனால் காலையில் நடந்த கூத்தை அறிந்தும் கண்டுகொள்ளமாட்டார்.
ஏனெனில் பணம் வந்துவிட்டது!
இதுதான் அவர்கள் சாதி,
கடவுள் ஒழிப்பு.
“நான் என்ன இருந்தாலும் சூத்திரன்” என்று நாற்பது வருடங்களுக்கு முன்னால் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி
அழுவார்.
காரணம் மவுண்ட்ரோடு
மஹாவிஷ்ணு என்ற ஆங்கில ஹிந்து பத்திரிகையோ அல்லது பல ஆண்டுகள் அருமையான கட்டுரைகள்,
தலையங்கங்கள் எழுதிய தினமணி ஆசிரியர் ஏ.என்.சிவராமனோ, காங்கிரஸ் கட்சி வசத்தில் இருந்த
தூர்தர்ஷனோ திமுகவின் குறைகளைத் தெரிவித்தால் கலைஞருக்கு சாதி ஞாபகம் வந்துவிடும்.
அதாவது பிராமணப் பத்திரிகைகள் அவரை எப்போதும் புகழ் பாடவேண்டும். இது ஒரு தாழ்வு மனப்பான்மை.
இப்போது ஊடகங்கள்
எல்லாம் அவர்கள் வசம். அந்தப் புலம்பல்கள் போய்விட்டன.
நான் 1967 ல் அரசுப் பள்ளியில்ஆசிரியராக சேர்ந்தபோது, அந்தப் பள்ளியில் மாட்டை ( காங்கிரஸ் சின்னம் இரட்டை காளை) ஆதரிக்கும் ஆசிரியர்களுக்கும், உதய சூரியனை ஆதரிக்கும் ஆசிரியர்களுக்கும் வாய் போர் நடக்கும். அப்போதுதான் திமுக ஆட்சிக்கு வந்திருந்தது. நான் வேடிக்கை பார்ப்பேன். சிலர் வகுப்புக்குக்கூட தங்கள் பீரியட்களுக்குப் போகாமல் சண்டை நடக்கும். கடைசியில் அது சாதிப் போராக முடியும். தலைமை ஆசிரியர் இவர்கள் போடும் கூச்சலைக் கேட்டு அந்தப் பக்கம் வந்தால், வகுப்புகளுக்கு ஓடுவார்கள். பாதி பீரியட் போய்விட்டிருக்கும். சிலர் ஒன்றாக எதுவும் நடக்காத மாதிரி எதிரில் இருக்கும் டீ கடைக்கு போய் பேசுவார்கள்.
இவர்கள் சாதிச் சண்டையில்
மாட்டிக்கொண்டவர்கள் காங்கிரஸை ஆதரித்த பிராமண , தாழ்த்தப்பட்ட இன ஆசிரியர்கள்தான்.
கருணாநிதி போட்ட சம்பள கமிஷன் ஆசிரியர்களை ஏமாற்றியபோது, யாரெல்லாம் திமுக வை ஆதரித்தார்களோ
அவர்கள் அவருடைய சாதியைத்தான் முதலில் திட்டினார்கள்.
( தொடரும்)
No comments:
Post a Comment