மழித்தல் வரலாறு
எனக்கு ஒரு வயதுக்குள்
1947ல் முதல் மொட்டை திருமலையில் போட்டதாக அம்மா சொன்னாள். அபோது எல்லோரும் படியேறிதான்
போகவேண்டுமாம். கூடவே சமையல் செய்ய பாத்திரங்களுடன், எங்கள் நிலத்து ஆள்கள் இருவரை
அமர்த்திக் கொள்வார்களாம். ஒருவர் என்னை தூக்கிககொள்ள. இன்னொருவர் மூட்டை முடிச்சுகளை
தூக்க. மைசூர் ராஜா கட்டிய சத்திரத்தில் கன்னடத்தில் பேசினால் இடம். அங்கே அம்மாவின்
சித்தி சமையல். இப்போதைய திருமலை ஹைடெக்காக மாறிவிட்டது. பக்தர்கள் கூட்டம் பெருகப்
பெருக ஸ்வாமியும் வினாடிகள் தரிசனம்தான் தருகிறார். எனக்குக் கல்யாணம் ஆகி சென்னை வந்தது
முதல் வருடத்திற்கு ஒருமுறை குடும்பத்தோடு போய்விடுகிறோம். முதலில் கோயம்பேடு பஸ்ஸில்.
அப்புறம் ஆந்திரா டூரிஸ்ட் பஸ்ஸில். பர்கிட் ரோடுக்குப் போய் காலை 5 மணி வொல்வோ பஸ்
பிடிக்கவேண்டும். மறுபடியும் ராத்திரி பத்துமணிக்கு ஆட்டோ அல்லது கார் பிடித்து மேடவாக்கம்
வருவது கஷ்டமாக இருக்கவே, ஒரு டிராவல்ஸில் மேடவாக்கத்தில் ஏறி, வரும்போது இங்கேயே இறங்கும்
வசதி. டெம்போ டிராவலர் அல்லது இன்னோவா கார்.
நேற்று ஜைலோ கார்
ஏற்பாடு செய்திருந்தது.
சரி மொட்டை கதைக்கு
வருகிறேன்
பொதுவாக பிராமணர்கள்
முதல் மொட்டைக்கு அப்புறம் மழிக்கமாட்டார்கள். நான் வேங்கடேஸ்வரா பல்கலையில் எம்.ஏ
ஆங்கிலம் பிரைவேட்டாக , ஆசிரியர் பணியின் போது படித்தேன். என் ஆங்கில மோகம் ஆறாம் வகுப்பில்
படித்தபோது வந்தது. ஒரு சந்நியாசி பாதபூஜைக்கு வீட்டுக்கு வந்தார். அவர் என்னைப் பார்த்துவிட்டு,
இவன் நன்றாகப் படிப்பான், ஆனால் இங்கிலீஷ் வராது என்றார். அன்று முதல் வீட்டில் வரும்
ஹிந்து பேப்பரை ஊன்றி படிப்பேன். காலேஜில் தெஸாரஸ் அறிமுகம். ஒரு தெசாரஸ் கிழிந்துவிட்டது
என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். புதிதாக ஒன்று வாங்கினேன்.
சென்னை பல்கலையில்
எம்.ஏ ஆங்கிலம் பிரைவேட்டாகப் படிக்க முடியாது. அப்போது திருப்பதி வேங்கடேஸ்வரா கை
கொடுக்க அதில் திருப்பதி யூனிவர்ஸிடிக்குப் போய் சேர்ந்துகொண்டேன் தனிப் படிப்பிற்கு.
சிலபஸ் வாங்கிக்கொண்டேன். தெலுங்கில் மாட்லடியதால் நூலகர் ஐந்து வருட கேள்வி ஃபைலை
தந்து, வெள்ளை பேப்பரும் தந்தார். செராக்ஸ் இல்லாத 1973ம் ஆண்டு. கையால் வினாக்களை
எழுதிக்கொண்டேன். எனக்கு கேள்விகள் எப்படி வரும் என்று புரிந்துபோனது. அதற்குத்தக புத்தகங்கள்
ஒரு பெரிய கடையில் வாங்கினேன். எல்லாம் ஒரிசனல்கள். இரண்டாம் வருட எம்.ஏவில் ஒரு சப்ஜெக்டில்
இரண்டு மார்க்கில் தோல்வி. மனம் உடைந்து போனேன். மீண்டும் நாலு பேப்பர் எழுதவேண்டும்.
இரண்டாம் முறை
எழுதிவீட்டு திருமலைக்குச் சென்றேன். ஸ்வாமியிடம் பாஸ் செய்தால் மொட்டை போடுவதாக வேண்டிக்
கொண்டேன். ரிஸ்ல்ட் தபால் வீட்டுக்கு வந்தது. 55% பாஸ். உடனே திருமலை.. வீட்டில் கூட
சொல்லவில்லை, மொட்டை போடுவதாக. அம்மா கத்துவாள். அப்பா சாது. ஒன்றும் சொல்லமாட்டார்.
வந்ததும் வீட்டில்
களேபரம். நான் வேண்டுதல் அப்படித்தான் செய்வேன் என்று சொல்லிவீட்டேன்.
ஸ்வாமி எனக்கு
சில சமயம் துன்பம் தந்து தீர்த்து வைத்து, முடி காணிக்கையும் வாங்கிவிடுகிறார்.. அப்படி
நேற்று ஐந்தாவது மழித்தல்!
No comments:
Post a Comment