13. மரியாதை தெரிந்தவர்கள்
1966 முதல் 1969 வரையிலும், ஆசிரியர்
பயிற்சி பெற்றபின் 1970 முதல் 2005 வரையிலும்
நான் பணியாற்றினேன். ஆனால் நான் ஒரு மாணவனைக் கூட அடித்ததில்லை.
திட்டுவேன்… ‘சோம்பேறி, உருப்படற வழியைப் பார்’ என்பதுதான் என் அதிகப்பட்ச திட்டுதல். அதே போல் பிரைவேட் டியூஷனும் எடுத்ததில்லை.
என் பள்ளிக்கூடம் திருபத்தூரிலிருந்து 15 கிமீ தொலைவில் இருந்தது. பஸ் பயணம். ஆனால்
என் கிராமத்திலிருந்து 3 கிமீ. அதனால் ப்ளஸ் டூ பரீட்சையின் போது மாணவர்களுக்கு
கோச்சிங் என கிராமத்து வீட்டுக்கு மூன்று நாள் வரவழைப்பேன். என் மொபெட்டில்
போவேன்.. பெண்களுக்கு தடா. பாதி பசங்கள் வருவார்கள்.
அந்த கிராமத்து
மேனிலைப்பள்ளியில் 11ம் வகுப்பில் 150 பேரும், 12ம்
வகுப்பில் 150 பேரும் படிப்பார்கள். லேப்
பக்கத்தில் அரசுப் பள்ளிகளில் ஒரு லெக்சர் ஹால் உண்டு. அங்கேதான்
ஆங்கில வகுப்பு. என் வகுப்பில் கீச் மூச் சப்தம் கேட்காது.
ஏனெனில் மாணவர்கள் ஆங்கிலத்தில்தான் என் பீரியடில் பேசவேண்டும்.
தமிழ் மீடியம் மாணவர்கள் திணறுவார்கள். நான் வேலூரில்
பணியாற்றியபோது அங்கே ப்ளஸ் டூவில் ஒரு ஆங்கில மீடியம் உண்டு. அந்த வகுப்பு நன்றாக இருக்கும். என்னுடன் கலந்துரையாடுவார்கள்.
நான் ஹைதராபாத் ஆங்கில கழகத்தில் படித்த மாடர்ன் டீச்சிங்கை அங்கே செய்வேன்.
ஆனால் கிராமத்து மாணவர்களுக்கு ஆங்கிலம் என்றாலே ஒரு பயம். அதனால் அவர்களுக்கு பாஸ் செய்வதற்கு வேண்டிய .வகையில்
பாடம் நடத்துவேன். வியாழன், வெள்ளிகளில்
prose essay, poetry essay, எழுத வைப்பேன். அதில்
ஒரு தவறு கூட வரக்கூடாதென்பேன்.
அந்தப்
பள்ளி பிரேயர் வளாகத்தில் நிறைய மரங்கள் உண்டு. அங்கே மாணவர்களை காப்பி அடிக்கவிடாமல் விதவிதமாய் உட்கார வைப்பேன்.
அதுவே ஒரு கட்டுரை போல எழுதவேண்டி வரும்.. என்னிடம் அங்கே படித்த பல
மாணவர்கள் ஆசிரியர், வங்கி என உத்தியோகத்துக்குப் போனார்கள்.
ஒருமுறை
வங்கி வரைவோலை வாங்க திருப்பத்தூர்
பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள வங்கிக்குப்
போனேன். அங்கே கியூவில் நின்றேன். ஒரு சேலை
அணிந்த பெண் சார் சௌக்கியமா என்று அருகில் வந்தாள். நான் அவளை
உற்றுப் பார்த்துவிட்டு நீ தானே என்று அவள் பெயரைச் சொன்னேன். அவள் ஆச்சரியப்பட்டாள். அவள் மானேஜர் அறைக்கு என்னை அழைத்துப்
போனாள். மானேஜர் நாற்காலியில் உட்காராமல் நின்றுகொண்டே இந்த பிராஞ்சுக்கு
போன மாதம் மாற்றலாகி வந்தேன் என்றாள். பியூனிடம் எனக்கு வரைவோலை
வாங்கி வரச் சொன்னாள். உட்காரும்மா என்றேன். சீட் முனையில் உட்கார்ந்தாள். இந்த மரியாதைதான் நன்றாய்
பாடம் நடத்திய ஆசிரியர்களுக்கு. இதற்கு ஈடு எதுவுமில்லை.
ஒருமுறை ஜோலார்ப்பேட்டையில் என்னிடம் எப்போதோ படித்த மாணவன் என்னைப் பார்த்துவிட்டு
அருகில் வந்தான். அவன் பெயர் ஞாபகம் வரவில்லை. சரியான வால் பையன்.. நான் அவனிடம் கேட்டேன், உன் பசங்களும் வாலா என்று. அவன் வெட்கப்பட்டு போங்க சார்
அது ஒரு காலம், இப்போ நான் சாது என்றான்.. டீ குடிக்கலாம் வாங்க என்று அழைத்தான். அவன் பஞ்சாயத்து
ஆபீசில் சீனியர் அலுவலராக இருப்பதாகக் கூறினான். இப்படி பல பேரை
நான் சந்திக்க முடிகிறது.
ஒருமுறை நான் சென்னை
பஸ்ஸில் சென்றபோது, ஒரு முதியவர் காலேஜ் ஸ்டாப்ப்பில் ஏறினார். பார்த்தால் அவர் என்
பதினோராம் வகுப்பு தமிழ் ஆசிரியர். பஸ்ஸில் இடமில்லை. நான் எழுந்து இடம் கொடுத்தேன்.
அவருக்கு நான் யாரென தெரியவில்லை. நானும் சொல்லிக் கொள்ளவுமில்லை. ஆம்பூரில் ஒருவர்
இறங்க எனக்கு இடம் கிடைத்தது.
No comments:
Post a Comment