Writer and Educationist எழுத்தாளர் கல்வியாளர்

Tuesday, March 5, 2019

மரபுசார் மடங்களும் கார்பொரேட் மடங்களும்


மரபுசார் மடங்களும் கார்பொரேட் மடங்களும்.

முன்பெல்லாம் எந்த போக்குவரத்து வசதிகளும் இல்லாத காலத்தில், ஒவ்வொரு கோயில் இருக்கும் ஊர்களிலும் தங்குவதற்கான மடங்கள் அவரவர் ஜாதிகளுக்குக் கட்டப்பட்டன. அப்படிப்பட்ட தங்குமடங்கள் இன்றும் சிதிலமடந்த நிலையில் காஞ்சீபுரம் போன்ற ஊர்களில் காணலாம். இது ஒருவகை என்றால் சங்கர, ஜீயர், மத்வ மடங்கள் அவரவர் சார்ந்த கொள்கைக்குழுக்களுக்காகக் கட்டப்பட்டன. இவை அனைத்துக்குமான ஒரே நோக்கம் சனாதன தர்மத்தை அவரவர் பின்பற்றுதலுக்கேற்ப கடைப்பிடிப்பதற்காக ஆகும்.

கொள்கைகளுக்காகக் கட்டபட்ட மடங்கள் சிறிது சிறிதாக வளர்ந்து பல ஊர்களில் நிறுவப்பட்டன. இவற்றில் கொள்கை சார்ந்தவர்களன்றி வேறு யாரும் பங்கெடுக்க முடியாது. வைதீக சைவர்கள் சங்கர மடத்திற்குப் போனார்கள். அப்படியே வைணவர்களும், மத்வர்களும். இதில் வைணவ குருக்கள் சிலர் எல்லா சாதிக்காரர்களையும் சேர்த்துக்கொண்டார்கள். ஆனால் சங்கரமடம், மத்வ மடம் ஆகியவை அத்தனை முற்போக்காகச் செயல்படவில்லை. வெறுமே கும்பிட வரும் பக்தர்களை இது குறிக்காது. 

உதாரணமாக ராகவேந்திர மடம், உடுப்பி மடம். குக்கே சுப்ரமண்யா ஆகியவற்றில் பிராமணர்களுக்கு தனி உணவுமுறை உண்டு.

இராமகிருஷ்ண மடம், ஆர்ட் அஃப் லிவிங், ஈஷா பவுன்டேஷன் ஆகியவை எல்லா சாதிக்காரர்களையும் சேர்த்துக்கொள்கின்றன. இவற்றில் பின்னிரண்டு நிறுவனகள் புதிய மடங்களாக உருப்பெற்று வருகின்றன. இந்துக்களை இவை வெகுவாகக் கவர்ந்திருக்கின்றன.

இவை இந்தியாவின் சாபக்கேடான செகுலர் கொள்கையில் இஸ்லாமும், கிறித்தவமும் ஏழை இந்துக்களை மதமாற்றம் செய்வதை ஓரளவுக்காவது தடுத்து நிறுத்தியுள்ளன.

ஆனால் இவை கொள்கை ரீதியான சங்கர, ஜீயர், மத்வ மடங்களுக்குப் போட்டியில்லை. அவற்றின் ஒரு நீட்சியாகத்தான் கருதவேண்டும். வடக்கே ஷீரடி சாய்பாபாவின் ஊர் 50 ஆண்டுகளில் அபரிமிதமான வளர்ச்சி பெற்றிருக்கிறது. தமிழ்நாட்டில் மேல்மருவத்தூர் வளர்ச்சியும் இந்து பாரம்பரியத்தைக் காப்பதில் துணை செய்கிறது. நித்தியாநந்தாவை நான் குறை கூறமாட்டேன். அது ஒரு செல்ஃப் ஸ்டைல்டாக போய்க்கொண்டிருக்கிறது.

கொள்கை ரீதியிலான மடங்களுக்கு குறைவு ஏற்படாது. இவற்றுள் ராகவேந்திர மடத்தின் கரம் எல்லா கொள்கையுடையோரையும் அரவணைத்துக்கொள்கிறது. இது காலத்தின் கட்டாயம். நான் பித்ருக்களுக்கு திதி கொடுக்கும்போது, என் பக்கத்தில் ஐயங்கார், ஐயர் உட்கார்ந்து அவர்கள் மூத்தோருக்கு திதி கொடுக்கிறார்கள். காரணம் வீட்டுக்கு வாத்யார்களை அழைக்கும் செலவு மிகுதி என்பதால்.

ஈஷாவில் சிவராத்திரிக்கு கூடும் கூட்டம் அந்த இரவுகளில் இரண்டு சினிமா பார்க்கும் கேவலத்தை முறியடித்திருக்கிறது. சிவ கோஷம் எழுப்பி அந்த இரவை உயிர்ப்பிக்கும் சத்குருவை பாரட்டத்தான்வேண்டும்.

ஆர்டஃப் லிவிங் ஸ்ரீ ஸ்ரீ அவர்கள் தயாரிக்கும் பொருள்கள் தரமானவையாகவே உள்ளன. நிறுவனம் பலபேருக்கு வேலை வாய்ப்புகளைத் தருகிறது. அவர்கள் தியான வகுப்பில் சென்னையில் ஒருமுறை கலந்துகொண்டேன். வித்தியாசமாகவே உணந்தேன். மகரிஷி மகேஷ் யோகி தியான மையத்தில் ஐம்பதாண்டுகளுக்குமுன் நான் கற்ற ஆழ்நிலை தியானமுறை இன்றும்கூட எனக்கு சில நாள்கள் தூக்கம் போச்சென்றால் இருபது நிமிடம் செய்கிறேன். அது எட்டு மணிநேர தூக்கத்திற்கு சமமாகும்.

ஶ்ரீஶ்ரீ, ஜக்கி வாசுதேவ், பங்காரு அடிகளார், ஷீரடி சாயி ஆகியோர் இன்று நமக்கு மிகவும் தேவைதான்.

கோவில்களுக்கும், கொள்கை மடங்ளுக்கும் போவோம், இவர்களையும் போற்றுவோம். இது இந்த மதமாற்ற அபாயச் சூழலில் காலத்தின் கட்டாயமாக அமைகிறது.




Monday, February 18, 2019

ஏன் புரிந்துகொள்ளவில்லை


ஏன் புரிந்துகொள்ளவில்லை?

ஊரில் நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் எனக்கு காந்தியும், நேருவும் ஆதர்ஷ புருஷர்களாகத் தெரிந்தார்கள். என் வீட்டு கொலு பொம்மைகளாக போன் வருடம் வரை அவர்களை நான் மரியாதை கொடுத்து வைத்திருந்தேன். இந்த வருடம் குப்பைத் தொட்டிக்குப் போய்விட்டன அந்தப் பொம்மைகள். நான் என்னவோ முகநூலில் அவற்றைக் கொடுத்துவிடுவதாகக்கூட சொன்னேன். யாரும் முன்வரவில்லை.
என்னகு ஊரில் நிறைய இஸ்லாமிய நண்பர்கள் உண்டு. கல்லூரியில் படிக்கையில் கிறிஸ்துவ நண்பர்களும் கிடைத்தார்கள்.

என் முப்பத்தைந்து வருட பணியில் நான் யாரையும் வித்தியாசமாகப் பார்க்கவில்லை. ஆனால் ஐந்து வருடங்களுக்கு முன் மோடி அவர்கள் பிரதமர் ஆனதும், தேவையில்லாமல் அவர்கள் மனதில் தீராவிஷ, காங்கிரஸ் கட்சிகள் ஒருவிதமான அச்சத்தை ஏற்படுத்தினார்கள். என் ஜி ஓ களை தவறான வழிகளில் மதமாற்றத்திற்குப் பயனபடுத்தியதை மோடி ஒழுங்குபடுத்தினார். அதனால் அவர்களுக்கு பொறுக்கவில்லை. ஏன்…1947 முதல்தான் மதமாற்றம் நடைபெற்றது. ஆனால் இலை மறை காய் மறைவாக நடைபெற்றது. 

என் அருகில் ஒரு கிறிஸ்துவ மாணவன் உட்காருவான். அவன் பட்டியல் இனத்தவன். எப்படி அவர்கள் குடும்பம் கஷ்டப்பட்டபோது கிறிஸ்துவர்களானார்கள் என்று சொல்வான். எனக்குப் பரிதாபமே மிஞ்சும். தவறாக நினைக்கவில்லை.

இப்போது சர்சுகளிலும், மசூதிகளிலும் பி ஜேபி யை எதிர்க்கிறோம் என்று ஒட்டுமொத்த இந்துக்களையும் தாக்குகிறார்கள். அவர்கள் மதம் மெஜாரிடியாக வந்தால்தால்தான் இந்தியாவில் பாலும் தேனும் ஓடுமா என்ன? சந்திர ஹாஸன், சாருஹாஸன் கிறிஸ்துவரானார்கள். அவர்கள் இஷ்டம். அவர்கள் ஒன்றும் வசதிக்குறைவானர்களில்லை. கமலஹாஸன் நாத்திகம் பேசுகிறார். சிலர் அவர் கிறிஸ்துவர் ஆகிவிட்டார் என்கிறார்கள். அவர் இந்து மதத்தை மட்டும் திட்டுகிறார். அவருக்கு பிரசனை எற்படுத்திய இஸ்லாமியர்களை திட்டமாட்டார். இதில் சந்தேகப்பட வேண்டியதிருக்கிறது.

தமிழ் பேசும் இஸ்லாமியர்கள் ஓடும் ரயிலில் இந்துக்களைத் திட்டுகிறார்கள். அவர்கள் மதம் உயர்ந்ததாம், சொல்லிக் கொள்கிறார்கள். இப்போது இந்துக்கள் எதிர்த்துப் பேசும் வீடியோக்கள் வருகின்றன. தங்கள் தலையில் கொள்ளிக்கட்டையை செருகிகொள்கிறார்கள்.

என்ன.. ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. இஸ்லாமியர் மக்கள்தொகை இந்துக்களின் மக்கள்தொகைக்கு சமமாவதற்கு இன்னும் 220 வருடங்கள் பிடிக்குமாம். அதற்குதான் இப்போதே சமமாக ஆசைப்படுகிறீகளா? எப்போதும் கார்பன் கல்லால் செயற்கையாகப் பழுக்கும் பழம் கெடுதலையே உண்டுபண்ணும்.. கிறிஸ்துவர்களுக்கு இன்னும் எத்தனையோ ஆண்டுகளாகும். அதற்குள் சிரியாவைப் போல நீங்கள் அடித்துக்கொள்வீர்கள். இந்துக்கள் மெஜாரிடியாக இருக்கும்வரைதான் உங்களுக்கு பாதுகாப்பு. 

இப்போது இந்துக்கள் தங்களின் சக்தியை உணர ஆரம்பித்துவிட்டார்கள். மைனாரிடிகளின் ஓலம் கேட்கத் தொடங்கிவிட்டது.

உங்கள் அவசரத்தில் என்னைப் போல் செகுலராக இருந்த ஒருவனை இழந்துவிட்டீர்கள். இனி இது ஒட்டாது. இது ஏன் புரியவில்லை உங்களுக்கு?


Friday, February 1, 2019

மொழிப்பள்ளம்


#மொழிப்பள்ளம்
ரொம்ப வருடங்களுக்கு முன் நான் ஹைதராபாத் ஆங்கிலக் கழகத்தில் முதுநிலை சான்றிதழுக்குப் படித்தபோது என்னுடன் பணியாற்றிய ஆசிரியர் தானும் ஆங்கில எம்.ஏ படிக்கவேண்டும் என ஆசைப்பட்டார். அவர் ஒரு பிஏ பிடி..

நான் அவரிடம் கேட்டேன் “நீங்கள் எப்படி சிந்திக்கிறீர்கள்?”

“தமிழில்தான்.”

“ஆங்கிலத்தில் ஏதாவது எழுதும்போது?”

“தமிழில் சிந்தித்து ஆங்கிலத்தில் எழுதுகிறேன்.”

“ஐயா! நீங்கள் எம்.ஏ எழுதினால் ஃபெயில் ஆகிவிடுவீர்கள்”

அவர் என்னை முறைத்துப் பார்த்தார்.

“What are the synonyms for the word think?”

‘தெரியாது.”

நான் சொன்னேன். “முதலில் நீள நோட்டு ஒன்றை வங்குங்கள். இன்றைய ஹிந்து பேப்பரில் உள்ள ஒரு செய்தியை தேர்ந்தெடுங்கள். ஒரு இங்கிலீஷ் வார்த்தை தெரியவில்லையா? அந்த வாக்கியத்தையே நோட்டில் எழுதுங்கள். அந்த தெரியாத வார்த்தைக்கு அன்டர்லைன் செய்து அர்த்தம் எழுதிக்கொள்ளுங்கள். அப்படியே அந்த நோட்டு பூராவும் தெரியாத வார்த்தைகளை அர்த்தம் காணுங்கள். ஆனால் ஒவ்வொரு நாளும் முதல் வாக்கியத்திலிருந்து கண்ணால் மேயுங்கள். ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள். நான் இப்படி 10000 வார்த்தைகளை நோட்டில் எழுதிப் படித்தேன்.”

“இதனால் என்ன லாபம்?”

“உங்கள் மூளையில் ஒரு ஆங்கிலப் பள்ளம் உருவாவதுதான்.”
‘ஆங்கிலப் பள்ளமா?”
“ஆமாம். தமிழ் படித்தால் தமிழ்ப் பள்ளம் இருக்கும்.
அப்போது ஆங்கிலம் எழுதும்போது அந்தப் பள்ளத்திலிருந்து சொற்கள் தானாக வரும்.”

“சார். டாக்டர் மு.வ பிஎச்டி படித்தவர். கண்ணதாசன் பள்ளியில் நின்றுபோனவர். இருவர் தமிழும் எளிதாக இருக்கின்றனவே?”

“சொன்னால் கோபித்துக்கொள்ளாதீர்கள். அவர்களுக்கு தமிழ்ப் பள்ளம் ஆழம் அதிகமில்லை. மு.வ வுக்கு ஆழம் அதிகமாயிருக்கும். சந்தேகமில்லை.. அவ்வளவுதான்..நிறைய தமிழ் எழுத்தாளர்களின் பள்ளம் குறைவுதான். ஆனால் ஆங்கிலத்தில் எழுதுவோர்க்கு அதிக பள்ளம் உண்டு. வார்த்தைகளும் அதிகம் அங்கிருக்கும்.ஆனால் ஒன்று. எளிமைதான் மக்களைக் கவரும். உதாரணமாக நான் முன்னர் சொன்னதைப்போல think என எழுதிவிட்டுப் போயிடலாம். ஆனால் ஆங்கிலத்தில் synonym படித்தவர்கள் conjecture, surmise, reflect என எழுதுவார்கள். படிப்பவர்களைப் பற்றிக் கவலைப் படாதவர்கள். அதில் எனக்கு உடன்பாடில்லை. நான் திங்க் என்றுதான் எழுதுவேன். ஆனால் என் பள்ளத்தில் நிறைய வார்த்தைகள் உண்டு.”

“சரி சார்.. நான் இன்றே ஒரு பெரிய நோட்டு போட்டுவிடுகிறேன். ஆங்கிலத்தில் எழுத ஆங்கிலத்திலேயே சிந்திக்கிறேன்.”

“நல்லது. கூடவே ஒரு தெசாரஸ் வாங்கிக்கொள்ளுங்கள்.”

“தெசாரஸா?”

“பார்த்தீர்களா. அதுவே உங்களுக்குத் தெரியவில்லை.”

அவருக்கு விளக்கினேன்.

“பெஸ்ட் ஆஃப் லக்.”


Wednesday, January 23, 2019

#காணாமற்_போகும்_மொழிகள்


#காணாமற்_போகும்_மொழிகள்
மாலை நேரத்தில் எங்கள் காலனியில் பல குழந்தைகள் ஓடிப் பிடித்து விளையாடுகிறார்கள். வயது 5-10 இருக்கும். அவர்களிடம் ஆங்கிலக் கூச்சல்கள்தான் கேட்கின்றன. நான் பெங்களூர் போனால் என் மொழியில் பேத்திகள் உரையாடுவதில்லை. ஆங்கிலம்தான். நான் கன்னடத்திலும், என் மனைவி மராத்தியிலும் பேசினால் புரிந்துகொண்டு ஆங்கிலத்தில் பதில் வருகிறது. ஒரு கால் ஊனமானவனை ரேசில் கலந்துகொள் என்று சொல்கிறவன் போல் இல்லாமல் நானும் அவர்களிடம் ஆங்கிலத்தில் பேசினால், பக்கத்தில் உட்கார்ந்து பல கதைகள், நிகழ்ச்சிகள் பற்றி உற்சாகமாய் பேசுகிறார்கள்.

ஜூனியர் காலேஜ் படிக்கும் பேத்தி தன் ஆங்கில விடைத்தாளைக் காண்பித்தாள். அதில் அவள் ஆசிரியை உன் கையெழுத்து நன்றாயிருக்கிறது என்று எழுதியிருந்தார். அவள் பேப்பரைப் பார்த்ததும் எனக்கு ஆச்சரியம். என் மூத்த பெண் என்னைப் போலவே சில ஸ்ட்ரோக்குகள் எழுதுவாள். பேத்திக்கும் அது வந்திருக்கிறது. இது ஜீன் சம்பந்தப்பட்டதா என தெரியவில்லை.

அம்மா கன்னடத்தில் தன் பெற்றோருக்கும், தம்பிகளுக்கும் கார்டில் எழுதுவாள். குண்டு குண்டாய் அழகாய் இருக்கும். அதைப் படிக்க நான் கன்னடம் படித்தேன். என் மாமா ஒருத்தரின் கன்னடம் படிக்கவே முடியாத கிறுக்கலில் இருக்கும். என் மனைவி கையெழுத்து நன்றாய் இருக்காது. ஆனால் என் மாமியார் தமிழ்க் கையெழுத்து அழகாயிருக்கும்.

அந்தக் காலத்தில் பத்திரிகை ஆசிரியர்களுக்கு நான் கடிதம் எழுதுவேன். பதில் அளிப்பவர்களாக இருந்தார்கள். நா.பா அவர்கள் கையெழுத்தைப் போல் அழகான ஒன்றைப் பார்த்தது கிடையாது. சாவி அவர்கள் கிறுக்கலாய் எழுதுவார். பரணில் அவர்கள் கடிதங்களை ஞாபகார்த்தமாய் வைத்திருக்கிறேன்.

டைப் ரைட்டிங் இன்ஸ்டிடியூட்கள் போய் இன்டெர்னர்ட் பப் வந்தது. ஸ்மார்ட் போன் வந்த பின்னால் அதுவும் குறைந்தது. இது வாட்ஸப், FB MESSAGE யுகம். சேட்டிங்கில் விஷயம் முடிந்துவிடுகிறது. . எல்லாம் ஆங்கிலத்தில். தமிழ் இனி மெல்லச் சாகும் என்றதில் பாதி உயிர் போய்விட்டது. மீதம் எத்தனை நாளோ.

பழைய தமிழ் சினிமாவில் இலக்கியத் தரமான வார்த்தைகள் கூட இடம் பெறும். அது குறைந்து அடிடா, வெட்டுடா என்று ஒரே கொலவெறியாய் இருக்கிறது. இது எங்கு போய் முடியுமோ….

எனக்கு ஓர் ஆதங்கம். 93 வயது வரை வாழ்ந்த அம்மா தமிழ் கற்காமல், என் எழுத்துக்களைப் படித்தேயில்லை. பேத்திகளும் அந்த லிஸ்டில் சேர்ந்துவிட்டார்கள். ஒரு கால கட்டத்தில் என் எழுத்துக்களுக்கு உரிமை கோரக் கூட தெரியாதவர்களாய் இருப்பார்கள்.

Tuesday, January 22, 2019

அச்சில் எழுத்தைப் பார்க்கும் சந்தோஷம்


அச்சில் எழுத்தைப் பார்க்கும் சந்தோஷம்
நான் பள்ளிப் பருவத்திலேயே எழுதி எழுதி விகடன், குமுதம் பத்திரிகைகளுக்கு அனுப்புவேன். தபால் தலை இணைத்து அனுப்பவேண்டும். எல்லாம் திரும்பி வந்துவிடும். அயர்ச்சியாக இருக்கும். அது 1967 வரை தொடர்ந்தது. முதல் கதை வேலூர் முரசில் வந்தது. ரூ25 சம்மானம். போஸ்ட்மேனுக்கு அதில் ஐந்து ரூபாய் கொடுத்தேன். வீட்டில் சாக்லெட் கொண்டாட்டம். அதன் பிறகு தினமணி கதிரில் அதே வருடம் என் சிறுகதையும், நாபாவின் தீபம் பத்திரிகையில் முதல் பரிசுக் கட்டுரையும் வெளியாயின. அச்சில் பார்க்கிற சந்தோஷம் அப்படி எழுதியவர்கள் அனுபவித்திருப்பார்கள். பல பத்திரிகைகளில் என் கதை கட்டுரைகள் வெளி வந்தன. ஆனால் என் ஆதர்ச விகடன் மட்டும் எனக்குப் போக்கு காட்டியது.

நான் 2004 ல் ஓய்வு பெற்றபோது என் ஆங்கிலம் பற்றிய அனுபவங்களை எழுத ஆரம்பித்தேன். முதலில் கல்கி ஆபீசுக்குப் போய் அதன் ஆசிரியர் சீதாரவியைப் பார்த்தேன். அவர் என் முதல் நான்கு அத்தியாயங்களை மேலோட்டமாகப் பார்த்துவிட்டு, முடியாது என திருப்பிக் கொடுத்துவிட்டார். அவருடைய எடுத்தெறிந்து பேசும் குணம் எனக்கு வியப்பை உண்டாக்கியது. ஒரு சிரித்த முகம் இல்லை. என்ன கஷ்டமோ அவருக்கு.. நான் அந்தக் காலத்தில் ஆசிரியர்கள் நாபாவிடமும், சாவி அவர்களிடமும் பழகியிருக்கிறேன். சாவி அவர்களை நான் தினமணி கதிர் ஆபீசில் சந்தித்து என் கதையை அவரிடம் கொடுத்தேன். “ஏற்கனவே அந்தப் பத்திரிகையில் என் மூன்று கதைகள் வந்திருந்தன.. கதையைப் பார்த்துவிட்டு உதவி ஆசிரியரிடம் கொடுத்துவிட்டார். இரண்டு வாரங்களில் நான் கொடுத்த தலைப்பு மாற்றப்பட்டுஎலெக்ட்ரிக் டிரெயின் ஹீரோஎன வந்தது. என்னிடம்

2006ல் விகடனுக்கு ஒரு கடிதம் எழுதினேன். ஒரு பெண்மணி என்னிடம் போனில் தொடர்பு கொண்டு, அவள் விகடன் ஆசிரியர் உங்களிடம் பேசுவார் என்றார். மாலையில் அதன் படியே ஆசிரியர் என்னிடம் எப்படிப்பட்ட தொடர் வேண்டும், நீங்கள் எப்படி எழுதப் போகிறீர்கள் என்று கேட்டார். நான் சொன்னதும் அவர் இரண்டு அத்தியாயங்களை எழுதி வாருங்கள் என்றார். அவர் சொன்னபடி முழு மூச்சாக இரண்டு நாளில் எழுதி, கிரீம்ஸ் சாலையில் இருந்த விகடன் ஆபீசுக்குப் போனேன். ஆபீஸ் பல கம்ப்யூட்டர்கள் சகிதம் ஹைடெக்காக இருந்தது.
அவள் அலுவலகத்தில் ஆசிரியர் .கா. சிவஞானத்தைச் சந்தித்தேன். அத்தியாயங்களைக் கொடுத்தேன். அவர் முகத்தைப் பார்த்தேன் மலர்ச்சி காணப்பட்டது. நான் நான்கு கேரக்டர்கள் பேசுவதாக எழுதியிருந்தேன். அதில் ஒரு கேரக்டர் வேண்டாம், மூன்றாக மாற்றி மீண்டும் எழூதி வாருங்கள் என்றார். அப்படியே செய்தேன். அது முதல் என் ஆங்கிலம் பற்றிய தொடர் அவள் விகடனில் வெளிவந்தது. கைப்பிரதிதான். அதனால் சிவஞானம் என்னை முதலில் ஒரு கேமிரா மொபலை வாங்கிக்கொள்ளச் சொன்னார். கம்ப்யூட்டரில் டைப் அடிக்கத் தெரியாது என்றதும், கற்றுக்கொள்ளச் சொன்னார்.

என் வீட்டில் கம்ப்யூட்டர் இருந்தும் மகள்தான் அதிகம் பயன்படுத்தினாள். தமிழ் ஃபான்ட் இல்லை. சிவஞானம் ஒரு ஃபான்டை தரவிரக்கம் செய்துகொள்ளச் சொன்னார். இருந்தாலும் 33 இதழ்கள் கையால் எழுதிதான் கொடுத்தேன்..

சிவஞானம் அருமையான எடிடர். அற்புதமான மனிதர். நான் எழுதியவற்றில் கையே வைக்கவில்லை. அவருடைய உதவி ஆசிரியர் தயாமலர் என்னிடம் சில பகுதிகளின் சந்தேகங்களை போனில் கேட்பார். போனிலேயே மாற்றிச் சொல்வேன். அவர் குறிப்பெடுத்து அவ்வாறே வெளிவரும்.
அதன் பிறகு நான் 2013 ல் லேப்டாப் வாங்கிக்கொண்டேன்.
இப்போது கிண்டிலில் KDP யில் நிறைய பேர் எழுதி மின்னூல் வெளியிடுகிறார்கள். சிலரின் தமிழ் தமாஷாக இருக்கிறது. இருந்தாலும் புத்தகமாகப் பார்த்துவிடுகிறார்கள். ஒருவேளை பத்திரிகைக்கு அனுப்பி தோற்றவர்களாக இருக்கக்கூடும்.

ஒருமுறை நான் தீபம் ஆபீசில் நாபாவை சந்தித்தேன்.
சாய்ராம், இந்த வரியைப் படிங்கஎன்று யாரோ எழுதிய கதைப் பிரதியைக் காண்பித்தார். நான் சரியாக இருக்கிறது என்றேன்.
அவர் இரண்டு மணி அடித்து ஓய்ந்தது என்று எழுதியிருக்கார். 11, 12 மணி அடித்தால்தான் ஓய்ந்தது என எழுதலாம். இரண்டே மணி அடித்தால்?” என்று அவர் விளக்கியதும் நான் அவரை வியந்தேன்.
எடிடர்கள் ன்பவர்கள் நல்ல தமிழ் படித்திருக்கவேண்டும். இப்போது சில பத்திரிகைகளின் உதவி ஆசிரியர்கள் கூட அப்படி இல்லை.