மரபுசார் மடங்களும்
கார்பொரேட் மடங்களும்.
முன்பெல்லாம் எந்த
போக்குவரத்து வசதிகளும் இல்லாத காலத்தில், ஒவ்வொரு கோயில் இருக்கும் ஊர்களிலும் தங்குவதற்கான
மடங்கள் அவரவர் ஜாதிகளுக்குக் கட்டப்பட்டன. அப்படிப்பட்ட தங்குமடங்கள் இன்றும் சிதிலமடந்த
நிலையில் காஞ்சீபுரம் போன்ற ஊர்களில் காணலாம். இது ஒருவகை என்றால் சங்கர, ஜீயர், மத்வ
மடங்கள் அவரவர் சார்ந்த கொள்கைக்குழுக்களுக்காகக் கட்டப்பட்டன. இவை அனைத்துக்குமான
ஒரே நோக்கம் சனாதன தர்மத்தை அவரவர் பின்பற்றுதலுக்கேற்ப கடைப்பிடிப்பதற்காக ஆகும்.
கொள்கைகளுக்காகக்
கட்டபட்ட மடங்கள் சிறிது சிறிதாக வளர்ந்து பல ஊர்களில் நிறுவப்பட்டன. இவற்றில் கொள்கை
சார்ந்தவர்களன்றி வேறு யாரும் பங்கெடுக்க முடியாது. வைதீக சைவர்கள் சங்கர மடத்திற்குப்
போனார்கள். அப்படியே வைணவர்களும், மத்வர்களும். இதில் வைணவ குருக்கள் சிலர் எல்லா
சாதிக்காரர்களையும் சேர்த்துக்கொண்டார்கள். ஆனால் சங்கரமடம், மத்வ மடம் ஆகியவை அத்தனை
முற்போக்காகச் செயல்படவில்லை. வெறுமே கும்பிட வரும் பக்தர்களை இது குறிக்காது.
உதாரணமாக
ராகவேந்திர மடம், உடுப்பி மடம். குக்கே சுப்ரமண்யா ஆகியவற்றில் பிராமணர்களுக்கு தனி
உணவுமுறை உண்டு.
இராமகிருஷ்ண மடம்,
ஆர்ட் அஃப் லிவிங், ஈஷா பவுன்டேஷன் ஆகியவை எல்லா சாதிக்காரர்களையும் சேர்த்துக்கொள்கின்றன.
இவற்றில் பின்னிரண்டு நிறுவனகள் புதிய மடங்களாக உருப்பெற்று வருகின்றன. இந்துக்களை
இவை வெகுவாகக் கவர்ந்திருக்கின்றன.
இவை இந்தியாவின்
சாபக்கேடான செகுலர் கொள்கையில் இஸ்லாமும், கிறித்தவமும் ஏழை இந்துக்களை மதமாற்றம் செய்வதை
ஓரளவுக்காவது தடுத்து நிறுத்தியுள்ளன.
ஆனால் இவை கொள்கை
ரீதியான சங்கர, ஜீயர், மத்வ மடங்களுக்குப் போட்டியில்லை. அவற்றின் ஒரு நீட்சியாகத்தான்
கருதவேண்டும். வடக்கே ஷீரடி சாய்பாபாவின் ஊர் 50 ஆண்டுகளில் அபரிமிதமான வளர்ச்சி பெற்றிருக்கிறது.
தமிழ்நாட்டில் மேல்மருவத்தூர் வளர்ச்சியும் இந்து பாரம்பரியத்தைக் காப்பதில் துணை செய்கிறது.
நித்தியாநந்தாவை நான் குறை கூறமாட்டேன். அது ஒரு செல்ஃப் ஸ்டைல்டாக போய்க்கொண்டிருக்கிறது.
கொள்கை ரீதியிலான
மடங்களுக்கு குறைவு ஏற்படாது. இவற்றுள் ராகவேந்திர மடத்தின் கரம் எல்லா கொள்கையுடையோரையும்
அரவணைத்துக்கொள்கிறது. இது காலத்தின் கட்டாயம். நான் பித்ருக்களுக்கு திதி கொடுக்கும்போது,
என் பக்கத்தில் ஐயங்கார், ஐயர் உட்கார்ந்து அவர்கள் மூத்தோருக்கு திதி கொடுக்கிறார்கள்.
காரணம் வீட்டுக்கு வாத்யார்களை அழைக்கும் செலவு மிகுதி என்பதால்.
ஈஷாவில் சிவராத்திரிக்கு
கூடும் கூட்டம் அந்த இரவுகளில் இரண்டு சினிமா பார்க்கும் கேவலத்தை முறியடித்திருக்கிறது.
சிவ கோஷம் எழுப்பி அந்த இரவை உயிர்ப்பிக்கும் சத்குருவை பாரட்டத்தான்வேண்டும்.
ஆர்டஃப் லிவிங்
ஸ்ரீ ஸ்ரீ அவர்கள் தயாரிக்கும் பொருள்கள் தரமானவையாகவே உள்ளன. நிறுவனம் பலபேருக்கு
வேலை வாய்ப்புகளைத் தருகிறது. அவர்கள் தியான வகுப்பில் சென்னையில் ஒருமுறை கலந்துகொண்டேன்.
வித்தியாசமாகவே உணந்தேன். மகரிஷி மகேஷ் யோகி தியான மையத்தில் ஐம்பதாண்டுகளுக்குமுன்
நான் கற்ற ஆழ்நிலை தியானமுறை இன்றும்கூட எனக்கு சில நாள்கள் தூக்கம் போச்சென்றால் இருபது
நிமிடம் செய்கிறேன். அது எட்டு மணிநேர தூக்கத்திற்கு சமமாகும்.
ஶ்ரீஶ்ரீ, ஜக்கி
வாசுதேவ், பங்காரு அடிகளார், ஷீரடி சாயி ஆகியோர் இன்று நமக்கு மிகவும் தேவைதான்.
கோவில்களுக்கும்,
கொள்கை மடங்ளுக்கும் போவோம், இவர்களையும் போற்றுவோம். இது இந்த மதமாற்ற அபாயச் சூழலில்
காலத்தின் கட்டாயமாக அமைகிறது.