ஏன் புரிந்துகொள்ளவில்லை?
ஊரில் நான் பள்ளியில்
படிக்கும் காலத்தில் எனக்கு காந்தியும், நேருவும் ஆதர்ஷ புருஷர்களாகத் தெரிந்தார்கள்.
என் வீட்டு கொலு பொம்மைகளாக போன் வருடம் வரை அவர்களை நான் மரியாதை கொடுத்து வைத்திருந்தேன்.
இந்த வருடம் குப்பைத் தொட்டிக்குப் போய்விட்டன அந்தப் பொம்மைகள். நான் என்னவோ முகநூலில்
அவற்றைக் கொடுத்துவிடுவதாகக்கூட சொன்னேன். யாரும் முன்வரவில்லை.
என்னகு ஊரில் நிறைய
இஸ்லாமிய நண்பர்கள் உண்டு. கல்லூரியில் படிக்கையில் கிறிஸ்துவ நண்பர்களும் கிடைத்தார்கள்.
என் முப்பத்தைந்து
வருட பணியில் நான் யாரையும் வித்தியாசமாகப் பார்க்கவில்லை. ஆனால் ஐந்து வருடங்களுக்கு
முன் மோடி அவர்கள் பிரதமர் ஆனதும், தேவையில்லாமல் அவர்கள் மனதில் தீராவிஷ, காங்கிரஸ்
கட்சிகள் ஒருவிதமான அச்சத்தை ஏற்படுத்தினார்கள். என் ஜி ஓ களை தவறான வழிகளில் மதமாற்றத்திற்குப்
பயனபடுத்தியதை மோடி ஒழுங்குபடுத்தினார். அதனால் அவர்களுக்கு பொறுக்கவில்லை. ஏன்…1947
முதல்தான் மதமாற்றம் நடைபெற்றது. ஆனால் இலை மறை காய் மறைவாக நடைபெற்றது.
என் அருகில்
ஒரு கிறிஸ்துவ மாணவன் உட்காருவான். அவன் பட்டியல் இனத்தவன். எப்படி அவர்கள் குடும்பம்
கஷ்டப்பட்டபோது கிறிஸ்துவர்களானார்கள் என்று சொல்வான். எனக்குப் பரிதாபமே மிஞ்சும்.
தவறாக நினைக்கவில்லை.
இப்போது சர்சுகளிலும்,
மசூதிகளிலும் பி ஜேபி யை எதிர்க்கிறோம் என்று ஒட்டுமொத்த இந்துக்களையும் தாக்குகிறார்கள்.
அவர்கள் மதம் மெஜாரிடியாக வந்தால்தால்தான் இந்தியாவில் பாலும் தேனும் ஓடுமா என்ன? சந்திர
ஹாஸன், சாருஹாஸன் கிறிஸ்துவரானார்கள். அவர்கள் இஷ்டம். அவர்கள் ஒன்றும் வசதிக்குறைவானர்களில்லை.
கமலஹாஸன் நாத்திகம் பேசுகிறார். சிலர் அவர் கிறிஸ்துவர் ஆகிவிட்டார் என்கிறார்கள்.
அவர் இந்து மதத்தை மட்டும் திட்டுகிறார். அவருக்கு பிரசனை எற்படுத்திய இஸ்லாமியர்களை
திட்டமாட்டார். இதில் சந்தேகப்பட வேண்டியதிருக்கிறது.
தமிழ் பேசும் இஸ்லாமியர்கள்
ஓடும் ரயிலில் இந்துக்களைத் திட்டுகிறார்கள். அவர்கள் மதம் உயர்ந்ததாம், சொல்லிக் கொள்கிறார்கள்.
இப்போது இந்துக்கள் எதிர்த்துப் பேசும் வீடியோக்கள் வருகின்றன. தங்கள் தலையில் கொள்ளிக்கட்டையை
செருகிகொள்கிறார்கள்.
என்ன.. ஒரு புள்ளிவிவரம்
சொல்கிறது. இஸ்லாமியர் மக்கள்தொகை இந்துக்களின் மக்கள்தொகைக்கு சமமாவதற்கு இன்னும்
220 வருடங்கள் பிடிக்குமாம். அதற்குதான் இப்போதே சமமாக ஆசைப்படுகிறீகளா? எப்போதும் கார்பன் கல்லால் செயற்கையாகப் பழுக்கும் பழம் கெடுதலையே உண்டுபண்ணும்.. கிறிஸ்துவர்களுக்கு இன்னும்
எத்தனையோ ஆண்டுகளாகும். அதற்குள் சிரியாவைப் போல நீங்கள் அடித்துக்கொள்வீர்கள். இந்துக்கள்
மெஜாரிடியாக இருக்கும்வரைதான் உங்களுக்கு பாதுகாப்பு.
இப்போது இந்துக்கள் தங்களின்
சக்தியை உணர ஆரம்பித்துவிட்டார்கள். மைனாரிடிகளின் ஓலம் கேட்கத் தொடங்கிவிட்டது.
உங்கள் அவசரத்தில்
என்னைப் போல் செகுலராக இருந்த ஒருவனை இழந்துவிட்டீர்கள். இனி இது ஒட்டாது. இது ஏன்
புரியவில்லை உங்களுக்கு?
No comments:
Post a Comment