Writer and Educationist எழுத்தாளர் கல்வியாளர்

Wednesday, January 20, 2021

அதாவது......


2. தோல்வி கண்ட  செகுலரிஸம்

இந்தியாவில் செகுலரிஸம் தோற்றுவிட்டது என்கிறார்கள்அதன் வடிவம் பலவாறாகச் சிதைந்து இன்று அது ஒரு கெட்ட வார்த்தையாகிவிட்டதுஇந்தக் கூற்றை எத்தனை பேர் ஒப்புக்கொள்வீர்கள்?

1961 ல் பிரதமர் ஜவஹர்லால் நேரு ”இந்த செகுலர் என்ற வார்த்தைக்கு ஹிந்தியில் எப்படி அதைச் சொல்லவேண்டும் என்று தெரியவில்லை” என்றார்அதை எப்படி விளங்கவைப்பது என்று குழம்பினார். அவரது மேல்நாட்டுப் படிப்பின் தாக்கத்தில் அந்த வார்த்தைக்குப் பொருள் தேடினார். இந்தியாவின் பாரம்பரியத்தை அவர் உணர மறுத்தார். பிறகு நேரு எல்லா மதங்களையும் சமதூரத்தில் வைப்பது என்றார்ஆனால் அவர் அப்படி வைக்கவில்லைஇந்து சட்டத்தை திருத்தினாரே தவிர முஸ்லீம் ஷரியாவில் கை வைக்கவில்லைஅப்படி எனும்போது நேரு சொன்ன equally க்கு அர்த்தம் இல்லாமல் போயிற்று.  சர்தார் பட்டேல் 1950 ல் இறந்துபோனார்நேருவுக்கு கட்சியில் ஒரு போட்டி குறைந்தது.

என்னதான் மோகன்தாஸ் காந்தி “ஈஸ்வர அல்லா தேரே நாம்” என்றாலும் இந்துக்களை முழுவதுமாக ஆதரிக்காமல்முஸ்லீம் பாசத்தால் அவர் பெரும் தவறிழைத்தார்அவர் செகுலரிஸம் ஒருதலைப்பட்சமாகவே இருந்ததுசார்பின்மை தத்துவத்திற்கு எதிராகவே அமைந்ததுஇந்தியா பிரிக்கப்படாமல் இருந்திருந்தால் நேருகாந்தி ஆகியவர்களின் செகுலரிஸம் அர்த்தமுள்ளதாக இருந்திருக்கும்.

அதனால்தான் ஷியாமா பிரசாத் முகர்ஜி நேருவின் போக்கு பிடிக்காமல் காங்கிரஸிலிருந்து விலகி பாரதிய ஜனசங்க கட்சியை ஆரம்பித்துநாடாளுமன்றத்தில் இடமும் பிடித்தார்அப்போதே செகுலரிஸம் தோற்க ஆரம்பித்துவிட்டதுஇந்த ஜனசங்கம் பின்னர் பிஜேபி ஆகியது.

ஆங்கில அகராதி: Secularism is neutrality towards all religions. It is the political belief in the separation of church and state. i.e. the position that religious belief should not influence public and governmental decisions என்று விளக்குகிறது.

நேருவின் காங்கிரஸ் அரசாங்கம் இந்த வரையறையின்படி இயங்கவில்லை. அவர்தான் செகுலரிஸத்தைக் கண்டுபிடித்தது என்பது தவறாகும்.

பழங்காலத்திலேயே இந்த வார்த்தை புழக்கத்திற்கு வந்துவிட்டதுமன்னர் அசோகர் புத்த மதத்தைத் தழுவினாலும்இந்துக்களின் சுதந்திரம் மேல் கை வைக்கவில்லைஎல்லா மதங்களையும் மதிக்கவேண்டும் என்று பொ.மு 3 வது நூற்றாண்டில் அவர் சொன்னார்.

 

முகலாய மன்னர் அக்பர் தீன் இலாஹி எனும் மதத்தைத் தோற்றுவித்தார்பெரும்பாலான அவரது பிரஜைகள் இந்துக்கள் ஆதலால் அவர்களைக் கவர அவர் நினைத்தார்.  அக்பர் சூரிய வழிபாட்டை நான்கு வேளையும் தொழ வலியுறுத்தினார்ஆனால் முஸ்லீம்கள் மேற்கு நோக்கிதான் தொழுவார்கள்ஓர் இஸ்லாமியன் எப்படி கிழக்கு நோக்கி கும்பிடுவது என சிலர் கொதித்தனர்ஆனால் அவரை எதிர்க்கத் துணியவில்லைஅரசவையில் அவருடன் இருந்த பீர்பால் போன்றவர்கள்தான் அந்த மதத்தைப் பின்பற்றினர்ராஜஸ்தானத்தைச் சேர்ந்த இளவரசிகளை அக்பர் மணந்தார்ஆனால் அவர்களை அவர் மதம் மாற்றாமல் தீபாவளி போன்ற பண்டிகைகளைக் கொண்டாடினார்இந்துக்கள் மேல் திணிக்கப்பட்ட ஜிஸியா வரியை ரத்து செய்தார்அவர் கூட இருந்த தீவிர முஸ்லீம்களுக்கு அக்பரின் நடவடிக்கைகள் பிடிக்கவில்லைஅதனால் அக்பர் இறந்ததும் அவர் தோற்றுவித்த மதமும் காணாமல் போயிற்று.

அரசியல் நோக்கர் ஒருவர் நேருவின் equal distance என்பதற்குப் பதில் கொள்கைரீதியான தூரம் –Principled distance என்னும் வார்த்தையைக் கொண்டு நேரு முழு செகுலரிஸத்தைக் கொண்டுவராததைச் சுட்டிக்காட்டுகிறார்..

நேருவும் டாக்டர் அம்பேத்கரும் பலமுறை விவாதித்தாலும் அரசியல் சட்டத்தில் செகுலர் என்ற வார்த்தையைச் சேர்க்கத் தயங்கினர். 42 வது அரசியல் சட்ட திருத்தத்தின் போது பிரதமர் இந்திரா காந்திதான் அந்த வார்த்தையைச் சேர்த்தார்.

ஆனால் இந்திரா காந்தி இந்த செகுலரிஸம் என்பதற்கு மதங்களை திருப்திபடுத்துதல்-appeasement என்று புரிந்துகொண்டு அதற்கு வேட்டு வைத்தார்அவர் மகன் ராஜீவ் காந்தியும் தன் பங்குக்குக் கெடுத்தார்எப்படி என்கிறீர்களா?

முஸ்லீம்களைத் திருப்திபடுத்த இந்திரா காந்தி அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தை மைனாரிடி நிறுவனம் என்று கூறி பல்டி அடித்தார்பஞ்சாபில் அகாலி தள் கட்சியை ஒழிக்க பிந்தரன்வாலே பிரிவை நேரடியாக ஆதரித்து சீக்கியர்களின் பகையைச் சம்பாதித்தார்இப்போது இந்திரா இந்துக்களைத் திருப்திபடுத்த பாரதமாதா கோவிலை நிறுவினார்அவர் மகன் ராஜீவ் காந்தி ஷாபானு வழக்கில் முஸ்லீம்களுக்குச் சாதகமாகச் சொதப்பினார்இந்துக்களைத் திருப்தி படுத்த அயோத்தியில் ராமஜன்ம பூமியைப் பூட்டியிருந்த பூட்டுகளைத் திறந்து நடவடிக்கை மேற்கொண்டார்அவர் பிள்ளை ராகுல் சிவபக்தன்பூணூல் போட்ட கவுல் பிராமணன் போன்ற  அவதாரங்கள் எடுத்து காங்கிரஸின் கொள்கைகளை ஏறக்குறைய அவர்களே ஒழித்துவிட்டார்கள்நேருவின் செகுலரிஸத்தை அவர்களின் குடும்பமே அவமதித்துவிட்டதுஓட்டு வங்கிக்காக தன்மானத்தையே காங்கிரஸ் கட்சி இழந்துவிட்டது.

இப்போது இந்து தேசியம்இந்து பாரம்பரியம் என்பதற்கு வருவோம்.

இந்து தேசியம் 19 ம் நூற்றாண்டிலேயே தொடங்கிவிட்டதுஒரு பக்கம் பிரிட்டிஷாரையும்இன்னொரு பக்கம் முஸ்லீம் மன்னர்களையும் எதிர்த்தார்கள்சாவர்க்கார் 1928 ல் இந்துத்வா என்ற வார்த்தையை உருவாக்கினார்அவரால் அடித்தள மக்களைத்தான் போரட்டம் செய்யத் தூண்டியதுஅதை RSS தலைவர் கோல்வாக்கர் பிடித்துக்கொண்டார்அவர் நாஜிகளை முன்னுதாரணமாக வைத்துக்கொண்டார். RSS அபரிமிதமான வளர்ச்சி கண்டு இன்று பிஜேபி ஆட்சியில் வந்து முடிந்திருக்கிறது..
சீக்கியர்களும்
கிறித்துவர்களும் இந்தியாவைத் தாயகமாகவே நினைக்கிறார்கள்ஆனால் முஸ்லீம்கள் இங்கேயே வாழ்ந்தாலும் அவர்கள் இன்னும் இந்தியாவைத் தாயகமாக நினைக்காத வரையில் பிஜேபியை அசைக்கமுடியாது. பிஜேபியினர்  இந்து தேசியம்இந்து பாராம்பரியம் என ரோடு போட்டுக்கொண்டு தெளிவாகவே இருக்கிறார்கள்முத்தலாக்கை ஒழித்ததுகாஷ்மீரில் 370 ஐ ஒழித்தது என வேகமாகப் போகிறார்கள்

காங்கிரஸ்
திராவிட கட்சிகளின் ஆதரவுடன் முஸ்லீம்கள் தவறான போக்கைக் கடைப்பிடித்து மெஜாரிடி இந்துக்களின் வெறுப்புக்கு ஆளாகிவருகிறார்கள்அந்த நிலையிலிருந்து அவர்கள் வெளிவருவது அவர்களுக்கே நல்லது.

RSS ன் பிடிக்காத அம்சம் ஒன்றுதான்அவர்கள் இன்னும் பாகிஸ்தானைப் பிரித்தது தவறு என வாதிடுகிறார்கள்ஒழிந்தது சனியன் என்று பொது மக்கள் நினைக்கிறார்கள்இந்திரா காந்தி பங்களாதேஷில் வீராங்கனையாகக் கருதப்படலாம்ஆனால் ஒருபுறம் அந்த நாடு நமக்கு எதிரியாக மாறிக்கொண்டிருக்கிறது.

 

இன்றைய இந்தியாவில் செகுலரிஸத்தின் நிலை:

  • ·         130 கோடி இந்தியர்களில் எங்கோ ஒரு முஸ்லீம்பட்டியல் இனத்தவர் கொலை செய்யப்பட்டால் மீடியா முழுவதும் கதறல்ஆனால் ஒரு இந்து அப்படி பலியானால் வாய்மூடி மவுனம்
  • ·         நோன்புக் கஞ்சி குடிக்கப் போட்டிஆனால் இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்த வாய் வராது
  • ·         சாதிமதம் பார்த்து வேட்பாளர்களை நிறுத்துதல்
  • ·         வந்தே மாதரம் பாடல்பாரத் மாதா என்ற சொற்றொடர் மதச்சார்புள்ளது
  • ·         தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்கமாட்டோம்.

 

இந்தியாவில் தற்போதைய மோதிஜியின் அரசு எல்லா மதங்களையும் மதிக்கிறது. ஆனால் மைனாரிடிகள் மெஜாரிடி இந்துக்களை தொடர்ந்து அவமதித்தால் வருந்த நேரிடும். விஜயநகர பேரரசு போன்று இந்துக்களின் பாதுகாப்பை மோதிஜி உண்டாக்கியிருக்கிறார். அதை இந்துக்கள் தக்கவைத்துக் கொள்வது காலத்தின் கட்டாயமாகும்

No comments:

Post a Comment