சரியாகத்தான் படிக்கிறோமா
1. மனப்பாடமே கல்வியாகுமா?
தேர்வுகள் எல்லாம் முடிந்துவிட்ட பின்னால் ஒரு பெரிய
பாறாங்கல்லை இறக்கிவைத்த மனோபாவம் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இருந்தது. பறந்து
திரியும் பறவைகளைப்போல் மனம் இலேசாகி, நண்பர்களுடன் சேர்ந்து, விடுமுறைக்கான
திட்டங்கள் வகுத்து பெரிய ஆராய்ச்சி செய்த நாள்கள் அவை.
நீங்கள் இந்தக் கதையைக் கேட்டிருப்பீர்கள். இரண்டு விறகு வெட்டிகள் அன்று யார் அதிக மரங்களை வெட்டுகிறார்கள் என்று போட்டி போட்டார்கள். ஒருவன் தொடர்ந்து வெட்டினான். இன்னொருவன் பலமுறை வெட்டுவதை நிறுத்தினான். முடிவில் பார்த்தபோது இரண்டாமவன்தான் அதிக மரங்களை வெட்டினான். அதற்குக் காரணம் அவன் அடிக்கடி கோடாரியைக் கூர் தீட்டினான் என்பதுதான். எனவே விடுமுறைகளில் மனதுக்கினிய செயல்கள் செய்வது என்பது அடுத்த ஆண்டுப் படிப்பை மேம்படுத்தும். பாட்டு, நீச்சல், ஓவியம் போன்றவற்றைக் கற்றால் தவறில்லை.
ஆனால் இப்போதெல்லாம் குழந்தைகளை ஏதேனும் படி, படி என்று அனுப்பி அவர்களின் வகுப்புப் பாடங்களையே படிக்கச் செய்து சோர்வடைய வைத்துவிடுகிறார்கள். இந்த மனோபாவம் மாறவேண்டும். அவர்கள் எப்படிப் படிக்கவேண்டும்? சரியாகத்தான் படிக்கிறார்களா என்பது கேள்விக்குறி.
பல வருடங்களுக்கு முன்னர் ஒரு நாள் ஆசிரியர்
அறையில் உட்கார்ந்திருந்தேன். என்னிடம் படிக்கும் மாணவன்
ஒருவன் வந்தான்.
நிமிர்ந்து பார்த்தேன். என்னிடம் மாணவர்கள்
கேள்வி கேட்பார்கள். நானும் அவர்களை ஊக்குவிப்பேன்.
“நம் தேசிய கீதம் சரியா சார்?” என்றான் அவன்.
“நம் தேசிய கீதம் சரியா சார்?” என்றான் அவன்.
“புரியற மாதிரி கேள்”
“சிந்து இப்போது பாகிஸ்தானில்தானே இருக்கிறது?
அதற்கு ஏன் நம் நாட்டைச் சேர்ந்தது போல் வாழ்த்துப் பாடணும்?”
என்னால் பதில் சொல்ல முடியவில்லை. அந்தக் காலத்தில் (1970 களில்) இப்போது போல் கூகுள் இல்லை. அவன் கேள்விக்கு ஆராய்ச்சி செய்து விடை கூறியிருக்க முடியும். கம்ப்யூட்டர், முகநூல், ஸ்மார்ட் ஃபோன் என்று இந்த உலகத்தை இப்போது சுருக்கிவிட்ட நிலை அன்று இல்லை. மாணவர் சிலர் அப்போதே சூட்டிகையாக இருந்தனர். இன்றைய மாணவர்கள் இன்னும் படு ஸ்மார்ட்டாக இருக்கிறார்கள். அவர்களைச் சமாளிப்பது என்பது, ஆசிரியர்களுக்கு உள்ள சவால். வீட்டிலே நவீன கருவிகளை அநாயாசமாகக் கையாண்டுவிட்டு, சமர்த்துபோல் வகுப்பறைக்குள் அமர்கின்றனர். அவர்களுக்கு இருக்கும் இந்த சாதனங்கள் பற்றிய பட்டறிவு, பாடம் நடத்தும் பல ஆசிரியர்களுக்கு இருக்குமா என்பது சந்தேகம்.
சில நாள்கள் முன்பு, பேச்சு வாக்கில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் என் பேத்தியிடம் “ஆல்மண்ட்’ சாப்பிடு” என்று கொடுத்தேன். சாதாரணமாகப் பேசும்போது உச்சரிப்பில் கோட்டை விடுகிறோம்.
“அது ஆல்மண்ட்
இல்லை, தாத்தா… “ஆமண்ட்” என்று என் உச்சரிப்பைத் திருத்துகிறாள் அந்தச் சின்னப் பெண்.
இந்த மாதிரி மாணவர்களுக்கு வெறும் மனப்பாடம்
செய்வித்துக் கல்வி போதிக்கலாமா? மனப்பாடம் செய்வது
தவறில்லைதான். அப்படிப்பட்ட முறை இல்லையென்றால் நமக்குப் பழம்பெரும் நூல்கள், வேதங்கள், மருத்துவக் குறிப்புகள், மந்திர உச்சாடனங்கள் போன்றவை கிடைத்திருக்கா.
நான் அரசுப் பள்ளியில் சாதாரண
ஆசிரியராகச் சேர்ந்து, தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து,
மாவட்ட கல்வி மற்றும்ஆசிரியப் பயிற்சி நிறுவனத்தில் (District
Institute of Education and Training-DIET) முதல்வர் பதவி வரை
பார்த்தவன். ஆசிரியர்களுக்குப் பணியிடைப்பயிற்சி தந்தபோது, அவர்கள்
எந்த நிலையில் மாணவர்களைச் சந்திக்கிறார்கள் என்று வினா எழுப்பி அவர்களைப் பேச
வைத்திருக்கிறேன்.. இதில் தமிழ்வழி, ஆங்கிலவழி உள்பட
தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி
ஆசிரியர்கள், அவற்றின் தலைமை ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகள் அடக்கம்.. அதன் மூலம் ஆசிரியர், மாணவர்களின் குணாதிசயங்களை
எடை போட்டிருக்கிறேன்.
நமது கல்விக்கூடங்கள் பலதரப்பட்டவை. வருடத்திற்கு ரூ 36000/- கட்டிப் படிக்கும் பள்ளிகளும்,
இலவசம், சத்துணவு என்ற சலுகைகளை அனுபவித்துக் கொண்டு படிக்கும் பள்ளிகளும் இங்கே உண்டு.
இந்த
இரண்டிலும் படிக்கின்றவர்களை நான் கவனித்திருக்கிறேன்.
கல்வித்தரம் என்பது இதுதானா? எந்த விதத்தில் இவர்கள் படிக்கும் முறை மாறுபடுகிறது?
கல்வித்தரம் என்பது இதுதானா? எந்த விதத்தில் இவர்கள் படிக்கும் முறை மாறுபடுகிறது?
நான்
சொல்கிறேன்…எந்த
வித்தியாசமும் இல்லை!! நான் கண்ட வித்தியாசம் ஒன்றுதான். ரூ36000க்கு நல்ல இங்கிலீஷ் பேசுகிறார்கள். இலவசக் கல்வி பெறுகிறவர்கள் ஒரு
வாக்கியத்தை ஆங்கிலத்தில் எழுதவே திணறுகிறார்கள். அவ்வளவுதான். ஆனால்
பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை வெறும் இங்கிலீஷ் பேசுவதற்கா இவ்வளவு செலவு செய்கிறார்கள்?
பள்ளி வாகனங்களில் சென்று திரும்பும் மாணவர்களைக் காட்டிலும்,
தாமாகவே நடந்தோ, பேருந்தில் சென்றோ படிக்கும் பிள்ளைகள் சுற்றுச்சூழல் பற்றிய அறிவை
அதிகமாகவே பெற்றிருக்கிறார்கள். ஒரு நகரத்தில் அல்லது ஊரில் தனியாகப் போகும்
தைரியம் அவர்களுக்கு இருக்கிறது. ஆனால்
இந்த மாணவர்களைச் சரியானபடி அவர்கள் பள்ளிகளில் கையாளவில்லை என்றுதான் கருத
வேண்டியுள்ளது.
தமிழ்வழிக் கல்வி படித்துவிட்டு டாடா குழுமத்துக்கே இன்று ஒருவர் தலைவர் ஆகியிருக்கிறார். அதனால் எங்கு படிக்கிறோம் என்பது முக்கியமில்லை, எப்படிப் படிக்கிறோம் என்பதுதான் முக்கியம்.
தேசியகீதத்திற்கே வருவோம். படிக்கும் பருவத்தில்
தினந்தோறும் பாடினோம் அல்லவா? எத்தனை பேருக்கு வார்த்தைக்கு வார்த்தை அதன் அர்த்தம் தெரியும்? அது தாகூர்
பெங்காலி மொழியில் எழுதியது என்றுதான் தெரியும். (நிறையப் பேர் அது இந்தி என்று
தெரியாமல் சொல்வது வேறு விஷயம்) அதற்கு மேல்?
இந்தியாவை உணர்வு பூர்வமாக அது இணைக்கிறது…அவ்வளவுதான். இதுதான் மனப்பாடம்
செய்வதில் உள்ள சங்கடம். புரிந்துகொண்டு படிக்கக் கூடிய பாடங்களுக்கு இதே அளவுகோல்
சரியா?.
Good info., Please continue!But how these things will reach the Executives & Politicians framing the Educational policies.,!?
ReplyDelete